search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beach Volleyball Tournament"

    • ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் கலந்து கொள்கின்றன.
    • காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடைபெறுகிறது.

    சென்னை:

    மெரீனா பீச் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இந்தியன் பீச் வாலிபால் புரோ டூர் பந்தயம் சென்னையில் நடத்தப்படுகிறது.

    அகில இந்திய அளவிலான பீச் வாலிபால் போட்டியான இந்த போட்டிகள் நாளை (8-ந் தேதி) முதல் 10-ந் தேதி வரை நீலாங்கரை கடற்கரையில் நடக்கிறது.

    இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, கோவா, டாமன் டையூ ஆகிய மாநிலங்களில் இருந்து 28 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் கலந்து கொள்கின்றன.

    லீக் மற்றும் நாக் அவுட் முறையில் பீச் வாலிபால் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் ஆண்களுக்கான பரிசு தொகை ரூ.1 லட்சம் ஆகும். பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. போட்டிகள் பகலிலும், இரவிலும் நடக்கிறது. காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடைபெறு கிறது.

    மேற்கண்ட தகவலை மெரீனா பீச் ஸ்போர்ட்ஸ் கிளப் பொதுச் செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் தெரிவித்துள்ளார்.

    • மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டியை நாகப்பட்டினத்தில் நடத்தின.
    • இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 156 அணிகள் பங்கேற்றன.

    சேலம்:

    தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம் மற்றும் நாகப்பட்டினம் கைப்பந்து கழகமும் இணைந்து மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டியை நாகப்பட்டினத்தில் நடத்தின. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 156 அணிகள் பங்கேற்றன. போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ரஞ்சனி, யாமினி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

    இந்த மாணவிகள் நேற்று சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமாரை சந்தித்து பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத் தலைவர்கள் அகிலாதேவி, ராஜாராம், தொழில் அதிபர் விஜயராஜ் மற்றும் பயிற்சியாளர் பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×