search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "barren"

    • தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டு கொண்டனர்.
    • சிறுகுடி கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட தரிசு நிலங்களை பார்வையிட்டார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் தாலுகாவில் கலைஞரின் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 13 ஊராட்சிகளில் தரிசுநிலங்களில் உள்ள காட்டு கருவேல் முள்செடிகளை அகற்றி சாகுபடிக்கு தயார்படுத்த வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர் சேக் அப்துல்லா தெரிவித்தார்.

    இந்த திட்டத்தில் சிறுவிவசாயிகளை இணைத்து 15 ஏக்கர் தரிசு நிலங்களை இணைத்து சங்கம் அமைத்து, முட்புதர்களை அகற்றி சாகுபடிக்கு ஏற்றவாறு மாற்றி சிறுதானியங்கள் உற்பத்திக்கு தயார்படுத்த வேண்டும். மானியத்தில் ஆழ்குழாய்கிணறு அமைத்து சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை துணை இயக்குநர் சேக் அப்துல்லா ஆய்வு செய்தார். 2022 சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சோளம், கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு ஆகிய சிறுதானியங்களை பயிரிட்டு அரசு மானியங்களை பெற்று பயனடைய கேட்டுக்கொண்டார்.

    சிறுகுடி கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட தரிசு நிலங்களை பார்வையிட்டார். தற்போது மழை பரவலாக பெய்து வருவதால் விவசாயிகள் தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்றி சாகுபடி நிலங்களாக மாற்றி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் உடனிருந்தார்.

    ×