என் மலர்
நீங்கள் தேடியது "Bangladesh Women"
- வங்கதேச மகளிர் அணி 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அணியுடன் முத்தரப்பு தொடரில் விளையாடின.
- வங்கதேச மகளிர் அணி சிவப்பு மற்றும் பச்சை அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடினர்.
2025 மகளிர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்குத் தயாராகும் விதமாக, வங்கதேச கிரிக்கெட் வாரியம் சேலஞ்ச் கோப்பை என்ற தொடரை நடத்தி வருகிறது. இதில் வங்கதேச மகளிர் அணி சிவப்பு மற்றும் பச்சை அணிகளாக பிரிக்கப்பட்டு, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அணியுடன் முத்தரப்பு தொடரில் விளையாடின.
இந்த தொடரின் ஒரு போட்டியில், வங்கதேச 15 வயதுக்குட்பட்ட சிறுவர் அணி, மகளிர் சிவப்பு அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த சிறுவர்கள் அணி 50 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மகளிர் அணி வெறும் 94 ரன்களுக்குள் சுருண்டது. இதன் மூலம் 87 ரன்கள் வித்தியாசத்தில் சிறுவர் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், மகளிர் பச்சை அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறுவர் அணி மீண்டும் அதிர்ச்சி அளித்தது.
யாருமே எதிர்பாராத விதமாக, மகளிர் அணிகள் இரண்டுமே 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அணியிடம் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளன. இது வங்கதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களாக வங்கதேச மகளிர் அணி எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேசம் தரப்பில் முர்ஷிதா 80 ரன்கள் விளாசினார்.
- மலேசியா அணி தரப்பில் மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில், எல்சா ஹண்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம் - மலேசியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க வீரர்களாக திலாரா அக்டர்- முர்ஷிதா காதுன் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். 33 ரன்கள் எடுத்த நிலையில் திலாரா அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் நிகர் சுல்தானா, முர்ஷிதாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து விளையாடிய இருவரும் அரை சதம் விளாசினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட முர்ஷிதா 80 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் வங்காளதேசம் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ரன்கள் குவித்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சுல்தானா 62 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
மலேசியா அணி தரப்பில் மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில், எல்சா ஹண்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
- முதலில் விளையாடிய வங்காளதேசம் 191 ரன்கள் குவித்தது.
- அதனை தொடர்ந்து விளையாடிய மலேசியா 77 ரன்கள் மட்டுமே எடுத்தது.
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம் - மலேசியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்காளதேசம் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முர்ஷிதா 80 ரன்னும் சுல்தானா 62 ரன்களும் விளாசினர். மலேசியா அணி தரப்பில் மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில், எல்சா ஹண்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனையடுத்து மலேசியா அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஐன்னா ஹமிசா ஹாஷிம்- வான் ஜூலியா ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தில் 2-வது பந்திலேயே ஐன்னா ஹமிசா 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த எல்சா ஹண்டர் 20 ரன்னிலும் வான் ஜூலியா 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனை தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வங்காளதேசம் அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பி பிரிவில் முதல் அணியாக மலேசியா வெளியேறியது.






