search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ban on agricultural work"

    • குமரி கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மழை பெய்யும்.
    • கடந்த சில தினங்களாக குறிப்பிட்ட ஒரு பகுதிகளில் அதிக மழை பெய்து வந்தது.

    கடலூர்:

    குமரி கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழக த்தின் கடற்கரை மாவட்ட ங்களில் மழை பெய்யும். மேலும் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மற்றும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். 

    கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. நேற்று கடலூர், நெல்லி க்குப்பம், பண்ருட்டி, குறி ஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், எஸ்.ஆர்.சி. குடித்தாங்கி, புவனகிரி , பரங்கிப்பேட்டை, வானமாதேவி, காட்டு மன்னார்கோவில், விருத்தா ச்சலம், சிதம்பரம், அண்ணா மலை நகர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகின்றது.இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை பணிகளாக மரம் அறுக்கும் கருவி, படகு, உயிர் காக்கும் கருவி போன்றவற்றை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதி கள் மற்றும் பேரிடர் காலத்தில் எங்கெங்கு பாதிப்பு ஏற்படும் பகுதிகள் என கண்ட றியப்பட்டு தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகின்றது இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக குறிப்பிட்ட ஒரு பகுதிகளில் அதிக மழை பெய்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் எஸ்.ஆர்.சி. குடிதாங்கி என்ற பகுதியில் 13.5 சென்டி மீட்டர் அளவில் மழை பெய்துள்ளது குறிப்பிடத்த க்கதாகும்.

    இதன் காரணமாக அப்பகுதியில் வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்த காரணத்தினால் கூடுதல் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உள்ளது. இந்த நிலை யில் தற்போது தென்பெ ண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது. மேலும் சீதோஷ்ன மாற்றம் காரணமாக பொது மக்களுக்கு உடல் உபாதை கள் ஏற்பட்டு அவதி அடைந்து வருவதை காண முடிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது அவசர அவசரமாக நடை பெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக வருகிற தை மாதம் நெல் அறு வடை செய்யப்படும் என விவசாயி கள் தெரிவித்தனர்.

    மேலும் மாவட்ட முழு வதும் தொடர் மழை காரண மாக விவசாய பணிகள் ஆங்காங்கே தடை ஏற்பட்டு உள்ளது. கடலூர் மாவட்ட த்தில் மழை அளவு பின்வரு மாறு:- எஸ்ஆர்சி குடிதாங்கி - 135.0, ஸ்ரீமுஷ்ணம் - 68.2, வடக்குத்து - 58.0, ஆட்சியர் அலுவலகம் - 38.8, குறிஞ்சிப்பாடி - 30.0, கடலூர் - 28.0, பண்ருட்டி - 26.0, கொத்தவாச்சேரி - 20.0, மீ-மாத்தூர் - 15.0, புவ னகிரி - 14.0, பெல்லா ந்துறை - 12.0, பரங்கி ப்பேட்டை - 6.2, வானமா தேவி - 4.6, காட்டுமன்னா ர்கோயில் - 4.0, லக்கூர் - 3.2, அண்ணாமலைநகர் - 3.0,. விருத்தாசலம் - 2.0, குப்பநத்தம் - 1.6, சிதம்பரம் - 1.0 என மொத்தம் 470.60 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

    ×