search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bail peition dismissed"

    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனு 6-வது முறையாக இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
    மதுரை:

    அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி உள்பட 3 பேர் பலமுறை ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் வழக்கின் தன்மை கருதி ஜாமீன் வழங்கவில்லை.

    இந்த நிலையில் நிர்மலாதேவி, முருகன் 6-வது முறையாக ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். #NirmalaDevi #NirmalaDeviCase
    ×