search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Backup Construction"

    • திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியது.
    • யாகம் நடத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் காட்டுநாயக்கன் பழங்குடியினர் தெருவில் உள்ள படைவெட்டி மாரியம்மன் கோயில் 9-ம் ஆண்டு திருவிழா வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளதால் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியது.

    முன்னதாக ஆலயம் முன்பு சிவாச்சாரியார் மந்திரங்களுடன் யாகம் நடத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு மகாதீபா ர்த்தனை காண்பிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    ×