search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baby girl dies"

    • ராதிகாகுமாரி வலது பாதங்காலில் பாம்பு கடித்து விட்டது.
    • சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பீகார் மாநிலம் முஜாபர்பூர் மாவட்டம், ராம்பூர், பிரயாகை பகுதியை சேர்ந்தவர் ரினாதேவி (39). இவரது கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    ரினாதேவி ஈரோடு மாவட்டம், ஈங்கூர், குட்டப்பாளையம் பகுதியில் தனது குழந்தைகளுடன் தங்கி சிப்காட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மகள் ராதிகா குமாரி (10) எழுதிங்கள் பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை ராதிகாகுமாரி வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது அவரது வலது பாதங்காலில் பாம்பு கடித்து விட்டது.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் உயர் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை ராதிகாகுமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×