search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "babu"

    • 30 வருடங்களுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்த நடிகர் பாபு கடந்த மாதம் காலமானார்.
    • இவரது உடலுக்கு இயக்குனர் பாரதிராஜா மற்றும் திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'என் உயிர் தோழன்'. இந்த படத்தில் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபுவை கதாநாயகனாக்கி படத்தை வெற்றி படமாக மாற்றினார் பாரதிராஜா. அரசியல் கதைகளம் கொண்ட இந்த படத்தில் தர்மா என்ற கதாபாத்திரத்தின் மூலம் முத்திரை பதித்தவர் பாபு.


    அன்றிலிருந்து 'என் உயிர் தோழன்' பாபு என்ற பெயருடன் வலம் வந்த இவர் விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி, தாயம்மா பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் கதாநாயகான நடித்தார். கடந்த 1991-ல் 'மனசார வாழ்த்துக்களேன்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது சண்டை காட்சி ஒன்றில் பாபு, மேலே இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது.

    இதில் நானே குதிக்கிறேன் என்று பாபு குதித்த போது டைமிங் மிஸ் ஆனதால், வேறு இடத்தில் விழுந்துள்ளார். இதில் அவரது முதுகெலும்பு உடைந்து நொறுங்கியது. அதன்பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாபு, குணமாகாததால் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார். இதையடுத்து கடந்த மாதம் நடிகர் பாபு காலமானார். இவரது உடலுக்கு இயக்குனர் பாரதிராஜா மற்றும் திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


    இந்நிலையில், பாபுவின் தாயார் பிரேமா மகன் இறந்த துக்கத்தில் மனமுடைந்து வாழ்ந்து வந்தார். இவர் முதுமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று காலமானார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரேமா மறைந்த முன்னாள் சபாநாயகர் க.ராஜாராமின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் பாபு.
    • பாபு கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார்.

    பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'என் உயிர் தோழன்'. இந்த படத்தில் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபுவை கதாநாயகனாக்கி படத்தை வெற்றி படமாக மாற்றினார் பாரதிராஜா. அரசியல் கதைகளம் கொண்ட இந்த படத்தில் தர்மா என்ற கதாபாத்திரத்தின் மூலம் முத்திரை பதித்தவர் பாபு.

    அன்றிலிருந்து 'என் உயிர் தோழன்' பாபு என்ற பெயருடன் வலம் வந்த இவர் விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி, தாயம்மா பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் கதாநாயகான நடித்தார். நான்கு படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய பாபு 5-வது படத்தில் தனது திரை வாழ்க்கையே தொலைத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.


    பாபு

    கடந்த 1991-ல் 'மனசார வாழ்த்துக்களேன்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது சண்டை காட்சி ஒன்றில் பாபு, மேலே இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. இதில் நானே குதிக்கிறேன் என்று பாபு தயாராகினார். ஆனால், படப்பிடிப்பு குழுவினர் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறி டூப் நடிகரை தயார்படுத்தியுள்ளனர். பாபு நானே குதிக்கிறேன் என்று குதித்த போது

    டைமிங் மிஸ் ஆனதால், வேறு இடத்தில் விழுந்துள்ளார். இதில் அவரது முதுகெலும்பு உடைந்து நொறுங்கியது. அதன்பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாபு, குணமாகாததால் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார்.


    பாரதிராஜா - பாபு

    இந்நிலையில், நடிகர் பாபு இன்று காலமானார். இவருக்கு இரங்கல் தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்கவேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த " என் உயிர் தோழன் பாபு "வின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.


    ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதி பல்சர்பாபுவை போலீசார் கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    காசிமேடு பகுதியை சேர்ந்தவன் பாபு என்கிற பல்சர்பாபு. இவன் மீது ஏராளமான வழிப்பறி வழக்குகள் உள்ளன.

    ‘பல்சர்’ பைக்குகளில் மட்டுமே சென்று வழிப்பறியில் ஈடுபடுவது இவரது ஸ்டைல்.

    தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்ட பாபுவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    கடந்த மாதம் அவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவனை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கடந்த மாதம் 14-ந்தேதி அதிகாலை பாபு, டீ குடிக்க வேண்டும் என்று பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் தெரிவித்தான். அவனை போலீசார் தங்களது மோட்டார் சைக்கிளில் அமர வைத்து ஆஸ்பத்திரி முன்பு உள்ள டீக்கடைக்கு அழைத்து சென்றனர்.

    டீ குடித்துக் கொண்டு இருந்தபோது பாபு திடீரென போலீஸ்காரர்களை தள்ளி விட்டு அருகில் சாவியுடன் நிறுத்தி இருந்த அவர்களது மோட்டார் சைக்கிளை ஓட்டி தப்பி சென்று விட்டான்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஒரு மாதமாக பாபு போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்தான்.

    இந்த நிலையில் பாபு, பெருங்களத்தூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் விரைந்து சென்று பாபுவை கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ×