search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Babanasam"

    • பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் போதை ஒழிப்பு பேரணியை துவக்கி வைத்தார்.
    • ஜே.ஆர்.சி மாணவர்கள், சாரணர் படை மாணவர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

     பாபநாசம்:

    பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமையில் நடைபெற்றது.

    பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், தேன்மொழி, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் போதை ஒழிப்பு பேரணியை துவக்கி வைத்தார்.

    இப்பேரணியில் ஆசிரியர்கள் முருகானந்தம் செல்வகுமார், சரவணன், ராஜ்குமார், சண்முகம் மற்றும் என்சிசி மாணவர்கள், ஜே. ஆர். சி மாணவர்கள், சாரணர் படை மாணவர்கள், ஆகியோர் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பிரச்சாரம் செய்தனர்.

    ×