search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avinashi Joint Drinking Water"

    • கட்டுமானப்பணி நீண்ட நாட்களாக ஒரே நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
    • சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி உட்பட பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    அவினாசி:

    குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நபார்டு மற்றும் ஆர்.ஐ.டி.எப்., திட்டத்தில், அவிநாசி மற்றும் திருப்பூர் ஒன்றியத்தை சார்ந்தகிராமங்களுக்கென ரூ.362 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டு, கடந்த 2020ல் பணி துவங்கியது.அவிநாசி ஒன்றியத்தில், சின்னேரிபாளையம், குப்பாண்டம்பாளையம், புதுப்பாளையம், வேட்டுவபாளையம் உள்ளிட்ட சில ஊராட்சிகளை உள்ளடக்கி நடந்து வருகிறது.

    இதில் சின்னேரிபாளையம் பகுதியில் கட்டுமானப்பணி நீண்ட நாட்களாக ஒரே நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

    இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களை உள்ளடக்கி, ஒவ்வொரு ஒப்பந்ததாரர் மூலம் பணி நடந்து வருகிறது. அதன்படி, சின்னேரிபாளையம் கிராமத்தில் குடிநீர் தேக்க தொட்டி உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மற்ற கிராமங்களில் ஒப்பந்ததாரர் மூலம் கட்டுமானப்பணி நடந்து வருகிறது.அனைத்து இடங்களிலும் பணி முடிந்தவுடன் ஒரே சமயத்தில் சுண்ணாம்பு அடித்து வர்ணம் பூசும் பணி துவங்கும். இக்கூட்டு குடிநீர் திட்டத்துக்கென, நரியம்பள்ளியில் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி உட்பட பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×