search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aunt"

    டி.வி.யில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதை தட்டிக்கேட்ட சித்தியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை வடக்கு பார்வதிபுரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் ராமு, பெயிண்டர். இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் 2-வதாக லட்சுமி (வயது36) என்ற பெண்ணை  திருமணம் செய்தார். முதல் மனைவி மூலம் ராஜேஷ் உள்ளிட்ட 2 மகன்களும், 2-வது மனைவி லட்சுமி மூலம்  2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவரும் ஒரேவீட்டில் வசித்து வருகின்றனர். ராஜேஷ் ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். லட்சுமி தனியார் பள்ளி ஒன்றில் உதவியாளராக  வேலைசெய்து வந்தார். 

    இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜேஷ் வீட்டில் அதிக சத்தத்துடன் டி.வி.யில்  பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில்  லட்சுமி செல்போன் அழைப்பு  வந்ததால் டி.வி. சவுண்டை குறைக்கும்படி  ராஜேசிடம் கூறினார். ஆனால் சவுண்டை  குறைக்காமல் ராஜேஷ் பிடிவாதம் செய்தார். 

    இதனால் ரஜேசை மிரட்ட போலீசில் புகார் செய்ய போவதாக  லட்சுமி கூறினார்.  இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமியின் வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த  லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில்  சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக  லட்சுமி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்த  புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ்  இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.
    ×