என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Audi Friday Festival"

    • நாளை தொடங்கி வருகிற ஆகஸ்டு 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது
    • ஸ்ரீஜலகண்டேஸ்வரர் தர்ம ஸ்தாபன நிர்வாகிகள் தகவல்

    வேலூர்:

    வேலூர், கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு ஆடி வெள்ளி திருவிழா நாளை தொடங்கி வருகிற ஆகஸ்ட் 25-ந் தேதி வரை 6 வெள்ளிக்கிழமைகளில் நடைபெற உள்ளது.

    முதலாவது வெள்ளி மஞ்சள் காப்பு அலங்காரமும்,2-வது வெள்ளி குங்குமப்பூ அலங்காரமும்,3-வது வெள்ளி புஷ்ப பாவாடை அலங்காரமும், 4-வது வெள்ளி சந்தன காப்பு அலங்காரமும்,5-வது வெள்ளி மீனாட்சி அலங்காரமும் 6-வது வெள்ளி சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    மேலும் ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி கங்கா பாலா ஈஸ்வரர் 23-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மழைவளம் பெருகி நீர்வளம் பெருகவும், தண்ணீர் பஞ்சம் நீங்கவும் கூட்டு பஞ்சபூத மகா யாகம் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் தர்ம ஸ்தாபன நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி வழிபாடு
    • சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று ஆடி 6-வது வெள்ளி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் அம்மனுக்கு கமண்டல நதியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்தனர். பெண்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

    இரவில் கமண்டல நதியில் அம்மனுக்கு தீரத்தவாரி நடைபெற்றது. ராஜராஜேஸ்வரி அலங்காரத்துடன் அம்மன் முத்து ரதத்தில் வீதி உலாவும் நடைபெற்றது. காலையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தூசிமோகன், வி.பன்னீர்செல்வம் உள்பட பலர் அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சிவஞானம், உதவி ஆணையர் ஜீவானந்தம், கோவில் அலுவலர்கள் மகாதேவன், சீனிவாசன், மோகன், ரவி, புலவர் சிவகுமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    மேலும் வேலூர், ஆரணி, போளூர் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப் பட்டிருந்தது.

    ×