search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attempt to bathe in fire"

    • பிரசாத கடையை அதிகாரிகள் அகற்றியதை கண்டித்து ஒப்பந்ததாரர் தீக்குளிக்க முயன்றார்.
    • தீ விபத்து எதிரொலியாக கோவுல் வளாகத்திற்குள் கடைகள் அமைக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் கோவிலில் பிரசாத கடை நடத்துவதற்கான உரி மையை ராமர் என்பவர் ஏலம் எடுத்து ஆண்டாள் சன்னதி கொடி மரம் அருகே கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்நிலை யில் மதுரை மீனாட்சி அம் மன் கோவில் வசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து எதிரொலியாக கோவுல் வளாகத்திற்குள் கடைகள் அமைக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து இந்த ஆண்டு நடந்த கோவில் கடைகளுக்கான ஏலத்தில் கோவில் வளாகத்திற்கும் கொடிமரம் அருகே கடை வைக்க கூடாது. மாறாக கோயில் முன் உள்ள மண்ட பத்திலோ, ஆடிப்பூர கொட் டகையிலோ சொந்த மாக செட் அமைத்து பிரசாத கடை வைத்துக்கொள்ள வேண்டும் என நிபந்தனை யுடன் ஏலம் விடப்பட்டது.

    இந்த ஆண்டு பிரசாத கடை நடத்துவதற்கான உரிமையை ரூ.21 லட்சத்திற்கு ஏலம் எடுத்த ராமர் கொடி மரம் அருகிலேயே கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று கோவில் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கடையை அப்புறப்படுத்த முயன்ற போது, எதிர்ப்பு தெரிவித்த ஒப்பந்ததாரர் ராமர், அவரது சகோதரி மற்றும் மகளுடன் உடலில் நெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவர்களை போலீசார் தடுத்தனர். கடை யில் இருந்த பொருட்களை அகற்றிய ஊழியர்கள் கோவில் முன் உள்ள மண்ட பத்தில் வைத்தனர்.

    இதுகுறித்து செயல் அலுவலர் முத்துராஜா கூறுகையில், இந்த ஆண் டுக்கான ஏலத்தில் கோவில் வளாகத்திற்குள் கடை வைக்க அனுமதி கிடையாது. அதற்கு பதில் கோவில் முன் உள்ள மண்டபத்திலோ அல்லது ஆடிப்பூர கொட்ட கையில் பிரசாத கடை அமைத்துக் கொள்ள வேண்டும் தெளிவாக குறிப்பிடப்பட்டது. இது ஒப்பந்தத் தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஆடிப்பூர திருவிழா முடிந்த பின் கடையை இடமாற்றம் செய்து கொள் கிறேன் எனக்கோரி யதால் ஒரு மாதம் அவகாசம் வழங் கப்பட்டது. அதன்பின் 4 முறை நோட்டீஸ் அனுப்பி யும் கடையை அகற்றவில்லை. அதனால் கோவில் பணியா ளர்கள் மூலம் கொடிமரம் அருகே இருந்த பொருட்கள் எடுக்கப்பட்டு, கோவில் முன் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது என் றார்.

    ×