search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athithamilar Peravai"

    • வீடுகளில் சிலாப்புகள் அடிக்கடி கீழே விழுந்ததால் வீடுகளை பராமரிப்பு செய்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
    • 414 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பழைய வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டன.

    நெல்லை:

    ஆதிதமிழர் பேரவையின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் இன்று நெல்லையில் நிருபர்களி டம் கூறியதாவது:-

    பாளை சாந்திநகர் அம்பேத்கர் நகரில் குடிசை மாற்று வாரியம் மூலம் 1992-ம் ஆண்டு, அடிக்கல் நாட்டப்பட்டு 1997-ல் பணிகள் முடிக்கப்பட்டு 366 வீடுகள் எங்களுக்கு வழங்கப்பட்டது. அதில் கடந்த 25 ஆண்டுகளாக குடியிருந்து வந்தோம். அந்த வீடுகளில் சிலாப்புகள் அடிக்கடி கீழே விழுந்ததால் வீடுகளை பராமரிப்பு செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

    அதன் அடிப்படையில் 2017-ம் ஆண்டு பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகும் உரிய முறையில் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் காங்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. எனவே பழைய வீடு களை இடித்து விட்டு புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், அதிகாரி களுக்கும் கோரிக்கை வைத்தோம்.

    இதைத்தொடர்ந்து 414 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பழைய வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டன. ஆனால் 7 மாதமாகியும் இதுவரை புதிய வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்காமல் இருப்பது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே நாங்கள் வெளியில் அதிக வாடகையில் வசித்து வருகிறோம்.

    இந்த பணிகளை ஆண்டு கணக்கில் கிடப்பில் போட்டு விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இன்னும் 10 நாட்களுக்குள் புதிய குடியிருப்புகள் பணிகள் தொடங்க வேண்டும். இல்லா விட்டால் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனர் மாரியப்ப பாண்டியன், திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தென்மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×