search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "athisaya Panimata"

    • கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய தலங்களில் சிறப்பு பெற்றதும், தமிழக அரசின் சுற்றுலாத்தலமுமானது தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயம்.
    • பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 137 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 137 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய தலங்களில் சிறப்பு பெற்றதும், தமிழக அரசின் சுற்றுலாத்தலமுமான தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்திருவிழா தொடக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது.

    முன்னதாக பனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெப ஸ்டின் ஆனந்த் தலைமையில் ஊர்பெரியவர்கள் கோவில் உள்ளிருந்து எடுத்து வந்தனர்.

    பின்னர் அந்த புனித கொடியை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் குருவானவர்கள் நெல்சன் பால்ராஜ், உள்ளூர் குருவானவர்கள் ரூபன், பீட்டர் பாஸ்டியான், ரினோ ஆகியோர் ஜெபம் செய்து அர்ச்சித்தனர். பின்னர் தர்மகர்த்தா திருக்கொடியேற்றினார்.

    இவ்விழாவில் குருவானவர்கள் இருதயராஜா, ஏ.ஜே.ரெக்ஸ், டி.டி.என்.கல்விக்குழுமங்களின் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ், தாளாளர் ஹெலன்லாரன்ஸ், உள்ளிட்டோர் கலந்து–கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆயர் ஆலய வளாகத்தை அர்ச்சித்து புனிதப்படுத்தினார்.

    தொடர்ந்து திருப்பலியும், மறையுரை நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும், இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. இன்று 2-ம் திருவிழாவை யொட்டிகுஜராத் மாநிலம் அகமதாபாத் ஆயர் ரெத்தினசாமி தலைமையில் ஆரோக்கியமாதா கெபி திறப்புவிழா நடைபெறுகிறது. வருகிற 3-ந் தேதி 8-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை நடைபெறுகின்ற திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு ஆலயத்தின் பின்பு புதிதாக கட்டப்பட்டுள்ள நற்கருணை சிற்றாலயத்தை ஆயர் ஸ்டீபன் அந்தோணி திறந்துவைக்கிறார். அதனைத் தொடர்ந்து ஆயர் தலைமையில் நற்கருணைப்பவனி நடைபெறுகிறது. பின்னர் திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது.

    ஆராதனை

    4-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெறுகின்ற திருப்பலியில் உறுதிப்பூசுதல் வழங்கும் வைபவம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு இரக்கத்தின் ஆண்டவர் கெபிதிறப்பு விழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது.

    இரவு 10 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும் இரவு 12 மணிக்கு திருப்பலியும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடைபெறுகிறது. 10-ம் திருவிழா அதிகாலை 5.15 மணிக்கு ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனியும் மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. 6-ம் தேதி (சனிக்கிழமை)முதல்சனி வழிபாடுகளும் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்குதந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்கு தந்தை சிபு ஜோசப் மற்றும் பங்கு மக்கள் வருகின்றனர்.

    ×