என் மலர்
நீங்கள் தேடியது "at Brahmalingeswarar temple"
- சுவாமி விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யும் விழா நடந்தது,
- ஆராதனை வழிபாடு செய்து சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப ட்டது.
சென்னிமலை,
சென்னிமலை அடுத்து ள்ள முருங்கத்தொ ழுவில் மிக பழமையான பிரம்மன் பூஜித்த தலமாக அமைந்து ள்ள வடிவுள்ள மங்கை உடனமர் பிரம்மலிங்கே ஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு பக்தர்களால் காணி க்கையாக அளிக்கப்பட்ட நடராஜர், சிவகாமசுந்தரி மற்றும் ரிஷப வாகனத்துடன் நின்ற மேனியில் பிரதோஷ நாயனார் (சந்திரசேகர மூர்த்தி) ஆகிய சுவாமி விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யும் விழா நடந்தது,
இதில் காலையில் கோவில் பரம்பரை அர்ச்சகர் சிவகாம திலகம் அமிர்லிங்க சிவச்சாரியார் தலைமையில் விநாயகர் வழிபாடு மற்றும் சிறப்பு யாக பூஜை மற்றும் புதிய சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீப ஆராதனை வழிபாடு செய்து சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவில் 20-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் வசித்த பஞ்ச வாத்தியம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






