search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assistant professor suicide"

    சோழத்தரம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த உதவி பேராசிரியை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள அகர புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விசுவநாதன். இவரது மகள் பாலா (வயது 27). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலா சொந்த ஊர் வந்திருந்தார். திடீரென்று வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்ட கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பாலா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சோழத்தரம் போலீசில் பாலாவின் தாயார் சாந்தி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் உதவி பேராசிரியர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை அருகே உள்ள மலுமச்சம்பட்டியை சேர்ந்தவர் செல்வன். இவரது மகன் எஸ்வின் (வயது 27). இவர் குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது பெற்றோரிடம் கூறினார். ஆனால் அவர்கள் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக எஸ்வின் மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட எஸ்வினின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×