என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Assistant Director Personal Inspection"
- 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கேரளா, கர்நாடகா மாநில எல்லைகளில் அமைந்துள்ள சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொக்காபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். 5 நாட்கள் நடைபெறும் இந்த தேர் திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களை சேர்ந்த 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு தேர் திருவிழா வருகிற 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சோலூர் பேரூராட்சியின் சார்பில் தார்சாலை பராமரித்தல், 20-க்கும் மேற்பட்ட கழிவறைகள் பராமரிப்பு, 50-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பேரூராட்சி உதவி இயக்குனர் இப்ராஹீம்ஷா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் கௌரி, கோட்டாட்சியர் துரைசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் அர்ஷத், துணைத் தலைவர் பிரேம்குமார், வார்டு உறுப்பினர் விஜயலட்சுமி ஆகியோர் இருந்தனர். இந்தத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- பூங்கா பகுதிகளிலும் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
- பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக சிறப்பு பகுதி மேம்பாடு திட்டத்தின் மூலம் மணியாபுரம் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவருடன் கூடிய மழைநீர் வடிகால்வாய் மற்றும் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பிடம் கட்டுதல், 15-வது நிதிக்குழு திட்டத்தின் மூலம் பேரூராட்சிகுட்பட்ட கிளிஞ்சாடா கிராமத்தில் ரூ.6.50 லட்சத்தில் வடிகால்வாய் அமைத்தல், நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைத்தல் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளை நேற்று பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகீம்ஷா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெகநாதன், இளநிலை பொறியாளர் விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றார்கள். இதை தொடர்ந்து காந்திபேட்டை முதல் ஓரநள்ளி வரை உள்ள சாலையின் பாதுகாப்பு மற்றும் பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்கா பகுதிகளிலும் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்