என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேர்திருவிழா பணிகள் குறித்து பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு
- 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கேரளா, கர்நாடகா மாநில எல்லைகளில் அமைந்துள்ள சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொக்காபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். 5 நாட்கள் நடைபெறும் இந்த தேர் திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களை சேர்ந்த 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு தேர் திருவிழா வருகிற 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சோலூர் பேரூராட்சியின் சார்பில் தார்சாலை பராமரித்தல், 20-க்கும் மேற்பட்ட கழிவறைகள் பராமரிப்பு, 50-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பேரூராட்சி உதவி இயக்குனர் இப்ராஹீம்ஷா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் கௌரி, கோட்டாட்சியர் துரைசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் அர்ஷத், துணைத் தலைவர் பிரேம்குமார், வார்டு உறுப்பினர் விஜயலட்சுமி ஆகியோர் இருந்தனர். இந்தத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்