search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashtami Chapparam"

    • திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் அஷ்டமி சப்பர விழா நடந்தது.
    • சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் அஷ்டமி சப்பரத்தை முன்னிட்டு இன்று சொக்கநாதர்-மீனாட்சி, பிரியாவிடைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளக்கும் விதமாக அஷ்டமி சப்பர வீதி உலா நடந்தது.

    முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் கல்யாண மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான சொக்க நாதர்-பிரியாவிடை, மீனாட்சி மற்றும் விநாய கருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் அஷ்டமி சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அஷ்டமி சப்பரத் தின்போது பூஜிக்கப்பட்ட அரிசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    கோவில் சிறப்பு பூஜைகளை சங்கர நாராயண பட்டர் செய்திருந்தார். விழாவிற் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷினி, தக்கார் சக்கரை அம்மாள் செய்திருந்தனர். விழா கட்டளைதாரர் மாரியப்பன் குடும்பத்தினர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ×