search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arulvaku"

    • அக்னிசட்டி, பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் வந்தனர்.
    • வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் இதனை பக்தி பரவசத்துடன் பார்த்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இடையபட்டியில் பாண்டி முனீஸ்வரர் சக்தி பீடத்தின் திருவிழா கடந்த அக்ேடாபர் 24-ந்தேதி தொடங்கியது. முதல்நாள் முளைப்பாரி முத்துபரப்பல் நிகழ்ச்சியும், அதனைதொடர்ந்து 28-ந்தேதி பவுர்ணமி தினத்தில் சூலம் வேண்டும் நிகழ்வு, நவம்பர் 1-ந்தேதி அக்னிசட்டி, பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் வந்தனர்.

    நேற்று கிடாவெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாண்டி முனி உபாசகர் மாதேவி கவிதாம்மாள் கருப்பசாமிக்கு கிடாஆடுகளை பலியிட்டு ஆடுகளின் ரத்தத்தை குடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் இதனை பக்தி பரவசத்துடன் பார்த்தனர்.

    இதனைதொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், பெண் சாமியார் ஆட்டு ரத்தத்தை குடித்து அருள்வாக்கு கூறுவார். இதன்மூலம் பலர் பலன் பெற்றுள்ளனர். எனவே அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர் என்றனர்.

    ×