search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrived at Anthiyur Gurunathasamy"

    • வனக்கோவிலில் இருந்து புறப்பட்டு புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலை வந்து அடைந்தது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் புகழ் பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் ஆடி பெரும் தேர் திருவிழா நேற்று தொடங்கியது.

    காலை 11 மணியளவில் புதுப்பாளையம் கோவிலில் இருந்து வனக்கோவிலுக்கு காமாட்சி அம்மன் சப்பரத் தேரில் முன் செல்ல, பக்தர்கள் தோளில் சுமந்தபடி பெருமாள்சாமி, குருநாதசாமி ஆகிய தெய்வங்கள் 60 அடி மக மோருதேர்களில் நேற்று வனக்கோவிலை சென்றடைந்தது.

    அதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் வனக்கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்த தெய்வங்கள் இன்று அதிகாலை 4 மணி அளவில் வனக்கோவிலில் இருந்து புறப்பட்டு புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலை வந்து அடைந்தது.

    இன்றிலிருந்து 3 நாட்கள் புதுப்பாளையம் கோவிலில் மூன்று தெய்வங்களும் பக்தர்களுக்கு சிறப்புஅலங்காரத்தி ல் அருள்பாலித்து வருகின்றனர். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வரு கின்றனர்.

    இந்த திருவிழாவின் போது மழை பொழிந்து அந்தப் பகுதி மட்டும் குளி ர்ச்சியை ஏற்படுத்தி வரும் இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு பொழிந்த மழை 4 மணி வரை பெய்தது.

    இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் வெப்பத்திலிருந்து, குளிர்ச்சியான காற்று வீசத் தொடங்கியது. இதனால் பக்தர்கள் குளிர்ச்சியான காற்றில் இருக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

    ×