search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "are missing"

    • இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற தர்ஷன் ஸ்ரீ மாலையில் வீடு திரும்பவில்லை.
    • விசாரித்ததில் தர்ஷன் ஸ்ரீயும், அவருடன் படிக்கும் மகிழனும் ஒன்றாக சென்றது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (40). இவரது மகன் தர்ஷன் ஸ்ரீ (16). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற தர்ஷன் ஸ்ரீ மாலை யில் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து பள்ளியில் சென்று விசாரித்ததில் தர்ஷன் ஸ்ரீயும், அவருடன் படிக்கும் கே.என்.பாளையம் அம்மன் நகரை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் மகிழனும் (16) ஒன்றாக சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களது பெற்றோர், நண்பர்கள், உறவினர்களது வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து தர்ஷன் ஸ்ரீன் தந்தை ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவர்கள் தர்ஷன் ஸ்ரீ, மகிழன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    ×