என் மலர்
நீங்கள் தேடியது "Arakkonam young girl suicide"
அரக்கோணம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே உள்ள குருவராஜபேட்டையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு இவரது மனைவி பிரியங்கா (வயது22). தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 2மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் தம்பதிக்கு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக குடும்ப தகாராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே மனமுடைந்த பிரியங்கா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வேணுசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.






