என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "appreciated"
- திருப்புவனம், மானாமதுரையில் யூனியன் அலுவலக கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- தமிழக மக்கள் பாராட்டும் வகையில் உதயநிதி ஸ்டாலின் செயல்படுவார் என்று விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மானாமதுரையில் புதிய யூனியன் அலுவலகங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. இரு இடங்களிலும் தனித்தனியாக நடந்த விழாக்களுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.
மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் முன்னிலை வகித்தனர். திருப்புவனம் மற்றும் மானாமதுரையில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டுவதற்கு கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் பொருளாதார நெருக்கடியை சீர் செய்து அனைத்து துறைகளின் சார்பில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு அனைத்து துறைகளின் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார். கிராமப்புற மேம்பாட்டுக்கு தனித்துவம் அளித்து அதற்காக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
குறிப்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் கிராமப் பகுதிகளில் சாலை, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்காகவும், பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் நவீன வசதிகளுடன் உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த கட்டிடங்களை சீரமைக்கவும் அறிவுறுத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
பெரு நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஏராளமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் சாக்கோட்டை, எஸ். புதூர், சிவகங்கை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் புதிய அலுவலகங்கள் கட்டிடத்திற்கான பணிகள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடமும், ரூ5. 55 கோடி மதிப்பீட்டில் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடமும் கட்டப்பட உள்ளன. மாவட்டத்தில் மீதம் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
வாரிசு இல்லாதவர்கள் வாரிசு அரசியலை பற்றி பேசுகின்றனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளது. தமிழக மக்கள் பாராட்டும் வகையில் அவர் செயல்படுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் இளையான்குடி ஒன்றிய செயலாளர்-முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், மானாமதுரை ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, நகராட்சி தலைவர்-முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, யூனியன் துணைத் தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இல்லம் தேடி கல்வி திட்ட பெண் தன்னார்வலர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சிவகாசி கோட்டாட்சியர் பிரிதிவிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலராக இருப்பவர் சிவகாமி.
இவர் சமீபத்தில் தனது மையத்திற்கு வரும் மாணவர்களை அரசு நூலகத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள நடைமுறைகளை விளக்கியதுடன், அவர்களை உறுப்பினராகவும் சேர்த்தார்.
மேலும் மாணவர்களை பல்வேறு கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுத்தி, ஓய்வு நேரத்தை மாணவர்கள் பயனுள்ளதாக செலவு செய்ய ஆலோசனை வழங்கினார். இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தேரோட்ட முன்னேற்பாடு கூட்டத்திற்கு வருகை தந்த போது, தன்னார்வலர்கள் சிவகாமி மற்றும் லாவண்யாதேவியை ஆகியோரை அழைத்து இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் இவர்களின் சிறந்த பணியை பாராட்டி, கலந்துரையாடி, ஊக்கம் அளித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சிவகாசி கோட்டாட்சியர் பிரிதிவிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்