search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apple Watch 3"

    ஐபோன் மாடல்களை தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #AppleWatch



    இந்தியாவில் தற்சமயம் விற்பனையாகும் ஐபோன் மாடல்களின் விலை குறைக்கப்பட்டதைப் போன்றே ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜி.பி.எஸ். மற்றும் ஜி.பி.எஸ். + செல்லுலார் மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிள் வாட்ச் 3 புதிய விலை 279 டாலர்கள் முதல் துவங்குகிறது. சில தினங்களுக்கு முன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதும், ஆப்பிள் வாட்ச் 3 ஜி.பி.எஸ். விலை அதிகரித்தது. விலை குறைப்புக்கு பின் ஆப்பிள் வாட்ச் 3 விலை ரூ.28,900 முதல் துவங்குகிறது.

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜி.பி.எஸ். 38எம்.எம். மாடல் ரூ.32,380 விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்சமயம் ரூ.3,480 குறைக்கப்பட்டு ரூ.28,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஜி.பி.எஸ். + செல்லுலார் 38 எம்.எம். மாடல் ரூ.1,180 குறைக்கப்பட்டு ரூ.37,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜி.பி.எஸ். வேரியன்ட் 399 டாலர் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாட்ச் சீரிஸ் 4 ஜி.பி.எஸ். + செல்லுலார் மாடல் 499 டாலர்கள் முதல் துவங்குகிறது. செப்டம்பர் 21-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் புதிய ஆப்பிள் வாட்ச் 4 விலை மற்றும் விற்பனை குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தில் பாரதி ஏர்டெல் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியுள்ளது. #Airtel #RelianceJio
    மும்பை:

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தில் பாரதி ஏர்டெல் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனங்களுக்கு வழங்கும் சில சேவைகளில் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதாகவும், இந்த விவகாரத்தில் ஏர்டெல் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ரிலையன்ஸ் ஜியோ கேட்டு கொண்டுள்ளது.

    “ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சேவை ஏர்டெல் சார்பில் வழங்கப்பட்டு வருவதில் ஒருங்கிணைந்த உரிமத்தின் விதிகளை மீறும் வகையில் உள்ளது,” என ரிலையன்ஸ் ஜியோ சார்பில் அனுப்பப்பட்டு இருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது குறித்து ஏர்டெல் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனத்தை மே 11-ம் தேதி முதல் விற்பனை செய்து வருகின்றன. ஆப்பிள் வாட்ச் மற்றும் ஐபோன் பயன்படுத்துவோர் ஒரே சிம் கார்டு கொண்டு ஐபோன் மற்றும் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்த முடியும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனத்தில் இ-சிம் வசதி வழங்கப்பட்டுள்ளது.


    இ-சிம் கார்டு, ஐபோனில் உள்ள சிம் கார்டுடன் பிரத்யேக நெட்வொர்க் நோட் மூலம் இணைந்து கொள்ளும். இந்த நோட் இ-சிம் கார்டில் உள்ள ப்ரோஃபைல் அலோகேஷனில் ஆப்பரேட்டர், சிம் தகவல்கள், பின், ரிமோட் ஃபைல் மேனேஜ்மென்ட் போன்ற தகவல்களை கொண்டிருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்திருக்கும் புகாரில் ஏர்டெல் சார்பில் இந்தியாவில் இசிம்-களுக்கான ப்ரோவிஷனிங் நோட்களை செட்டப் செய்யவில்லை என குறிப்பிட்டிருக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனங்களில் வழங்கும் நோட்கள் இந்தியாவுக்கு வெளியே அமைந்திருக்கிறது, என்றும் விதிமுறைகளை மீறும் செயல் என ஜியோ தெரிவித்திருக்கிறது.

    மேலும் “ஏர்டெல் நிறுவனம் மேண்டுமென்றே இந்திய எல்லைக்கு வெளியே நெட்வொர்க்களை கட்டமைத்திருக்கிறது, இந்த விவகாரத்தில் உடனடியாக ஏர்டெல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறோம். இதுமட்டுமின்றி ஏர்டெல் உடனடியாக இந்த சேவையை நிறுத்த உத்தரவிட வேண்டுமென,” ஜியோ தெரிவித்துள்ளது.  #Airtel #RelianceJio
    இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ([ஜிபிஎஸ் + செல்லுலார்) விற்பனை துவங்கியுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஆப்பிள் ஏற்கனவே அறிவித்ததை போன்று வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மாடலின் விற்பனையை இந்தியாவில் துவங்கியுள்ளது. 

    இந்தியாவில் மே 4-ம் தேதி முன்பதிவு துவங்கிய நிலையில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 பேஸ் மாடல் விலை ரூ.39,080 முதல் துவங்குகிறது. ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோ ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 இசிம் பயன்படுத்துவதால், பிரத்யேக சிம் கார்டு தேவைப்படாது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடல்களில் மேம்படுத்தப்பட்ட டூயல்-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 70% வேகமாக இயங்கும், புதிய W2 வயர்லெஸ் சிப் 85% வேகமான வைபை, 50% சீரான ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகளையும் வாட்டர் ரெசிஸ்டண்ட் பாடி கொண்டுள்ளது.



    அறிமுக சலுகைகள்:

    ஏர்டெல் சார்பில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.5000 வரை கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ஜியோ எவ்ரிவேர் கனெக்ட் (JioEverywhereConnect) சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவையை கொண்டு ஒரே ஜியோ நம்பரை ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்த முடியும். ஜியோ எவ்ரிவேர் கனெக்ட் சேவை ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.



    பல்வேறு நாடுகளில் விற்பனை:

    இந்தியா மட்டுமின்றி ஸ்வீடன், டென்மார்க் மற்றும் தாய்வான் உள்ளிட்ட நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 9ஜிபிஎஸ் + செல்லுலார்) ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், புவேர்ட்டோ ரிக்கோ, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங், லண்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. 

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 இந்திய விலை:

    புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மாடல் 38 மில்லிமீட்டர் சில்வர் அலுமினியம் கேஸ் ஃபாக் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் பேன்ட் / கோல்டு அலுமினியம் கேஸ் மற்றும் பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், கிரே ஸ்போர்ட் பேன்ட் விலை ரூ.39,080 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஆரம்ப விலை ரூ.39,080 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு கேஸ்கள், மற்றும் நிறங்களுக்கு ஏற்ப விலை மாறுகிறது. ஆப்பிள் வாட்ச் எடிஷன் (ஜிபிஎஸ் + செல்லுலார்) 42 மில்லிமீட்டர் செராமிக் கேஸ், சாஃப்ட் வைட் / பெப்பிள் ஸ்போர்ட் பேன்ட் கொண்ட மாடலின் விலை ரூ.1,22,090 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆப்பிளின் விலை உயர்ந்த் சீரிஸ் 3 வாட்ச் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    ×