search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna marumalarchi Project Camps"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களின் நலன் கருதி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II என்ற திட்டத்தினை அறிவித்துள்ளார்.
    • பொது மக்கள் அரசு அலுவலகங்களுக்கு பயணம் செய்து நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை அளிப்பதால் ஏற்படும் நேரம், செலவு மற்றும் இன்னல்களை போக்குகின்ற வகையில் மக்கள் வசிக்கும் கிராமத்திற்கே வருவாய் துறை அலுவலர்கள் நேரில் சென்று குறைகளை கேட்கும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களின் நலன் கருதி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II என்ற திட்டத்தினை அறிவித்துள்ளார்.

    பொது மக்கள் அரசு அலுவலகங்களுக்கு பயணம் செய்து நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை அளிப்பதால் ஏற்படும் நேரம், செலவு மற்றும் இன்னல்களை போக்குகின்ற வகையில் மக்கள் வசிக்கும் கிராமத்திற்கே வருவாய் துறை அலுவலர்கள் நேரில் சென்று குறைகளை கேட்கும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    அதன் அடிப்படையில் நாளை (வெள்ளிக்கிழமை) அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II வருவாய் துறை சார்பில் ஒவ்வொரு வட்டத்திலும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சியில் முகாமிட்டு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் முதற்கட்டமாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) மானூர் வட்டாரத்தில் பாலாமடை ஊராட்சிக்குட் பட்ட கீழ பாலாமடை சமுதாய நலக்கூடத்தில் நடைபெறுகிறது.

    சேரன்மகாதேவி வட்டாரத் தில் திருவிருத் தான் புலி ஊராட்சிக் குட்பட்ட திருவிருத் தான்புலி சமுதாய நலக்கூடத்திலும், நாங்குநேரி வட்டாரத்தில் இலங்குளம் ஊராட்சிக்குட் பட்ட பரப்பாடி, இலங்குளம் ஊராட்சி மன்ற அலுவல கத்திலும் நடைபெறுகிறது.

    திசையன்விளை வட்டாரத்தில் அழகப்பபுரம் கிராம சேவை மையம், விஜயநாராயணம் ராசையா தேவர் திருமண மண்டபம், ராதாபுரம் வட்டாரத்தில் தெற்கு வள்ளியூர் ஊராட்சி மன்ற அலுவலகம், இருக்கன்துறை ஊராட்சி மன்ற அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் இலவச வீட்டு மனை பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை, சமூக பாதுகாப்பு திட்டங்கள், ஜாதி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாலை வசதிகள், போக்குவரத்து வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை சேவைகளுக்கு பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

    எனவே இந்த முகாமில் பொது மக்கள் கலந்து கொண்டு வருவாய் துறை மற்றும் இதர துறைகளின் சேவைகளை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் விஷ்ணு கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×