என் மலர்
நீங்கள் தேடியது "Anganwadi workers protest"
- நேற்று மாலை கடுமையான மழை பெய்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- இன்று 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்:
தமிழகத்தின் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் 2023ம் ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் 15 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு 30 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்த நிலையில் தற்போது 15 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
நேற்று மாலை கடுமையான மழை பெய்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இன்று அதே கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், குடைகளை பிடித்தும் தங்களது சேலையால் தலையை மூடியும் கடும் வெயிலிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்தும், கும்மியடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பதவி உயர்வு, 2 அல்லது 3 மையங்கள் பொறுப்பு பார்ப்பதை தவிர்த்தல் மற்றும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என 9 கோரிக்கைகள்.
- அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகளின் நலன் கருதி கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை வழங்குவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாத காலம் விடுமுறை வழங்கிட வேண்டும்.
10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்த விதமான நிபந்தனையின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் பொறுப்பு பார்ப்பதை தவிர்க்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் மின் கட்டணம் அரசே கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நத்தம் தொகுதி செயலாளர் சண்முகவள்ளி தலைமையில், பொறுப்பாளர்கள் நித்யா, பிரேமா, ஈஸ்வரி உள்ளிட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






