என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "America president election"

    • அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாக ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
    • அதிபர் தேர்தலில் வென்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையை கமலா ஹாிஸ் படைப்பார்.

    அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாக ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

    இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், "ஜனநாயக கட்சியினரே, எனது வேட்புமனுவை ஏற்க வேண்டாம். எஞ்சியிருக்கும் பதவிக்காலம் முழுக்க அதிபராக எனது கடமைகளில் முழு ஆற்றலை செலுத்த முடிவு செய்துள்ளேன்."

    "இந்த ஆண்டு தேர்தலில் எங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்-க்கு என் முழு ஆதரவு, ஒப்புதலை வழங்குகிறேன். ஜனநாயகவாதிகள் ஒன்றுகூடி டிரம்ப்-ஐ தோற்கடிக்க வேண்டிய நேரம் இது. இதை செய்வோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதிபர் தேர்தலில் வென்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையை கமலா ஹாிஸ் படைப்பார்.

    இந்நிலையில், அதிபர் வேட்பாளராக கமலா தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

    இதற்கிடையே, பைடனின் பிரசார செயலகம், கமலா பிரசார செயலகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    பிரசாரத்தின்போது, நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்டது டொனால்ட் டிரம்ப்பா ? வழக்கறிஞர் கமலா ஹாரிசா ? என்ற முழுக்கத்துடன் கமலா அணி பிரசாரத்தை தொடங்கியது.

    பிரசாரத்தில், பெண்களின் கருத்தடை உரிமை, ஜனநாயகத்தை டிரம்பிடமிருந்து காப்பது உள்ளிட்டவற்றை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்ய கமலா திட்டமிட்டுள்ளார்.

    அதிபர் வேட்பாளராக பெறப்பட்ட பல மில்லியன் டாலர் பிரசார நிதியை கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்கு மாற்றிக் கொடுக்கும் வேலைகளில் பைடன் இறங்கியுள்ளார்.

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார்.
    • கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம் என்றார் முன்னாள் அதிபர் ஒபாமா.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கட்சியின் அதிபர் வேட்பாளரை மாற்றவேண்டும் என ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பலரும் போர்க்கொடி துாக்கினர். இதனால் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார்.

    இதையடுத்து, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை முன்மொழிந்தார். அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    இந்நிலையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

    இந்த வாரம் நானும், மிச்சலும் எங்களது நண்பர் கமலா ஹாரிசை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது, அமெரிக்காவின் மிகச்சிறந்த அதிபராக அவர் இருப்பார். எங்களின் முழு ஆதரவை அவருக்கு வழங்கினோம். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெறுவார். நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதை உறுதி செய்ய எங்களால் முடிந்ததை செய்வோம். நீங்களும் இணைவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    அடுத்த மாதம் சிகாகோவில் நடைபெற உள்ள கட்சி மாநாட்டில், அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க அதிபர் தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.
    • அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது பரப்புரையை கமலா ஹாரிஸ் தொடங்கினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் டிரம்ப் உடனான விவாதத்தின் போது பேச தடுமாறியது மற்றும் உடல் நிலை காரணமாக அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று சொந்த கட்சியினரே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சியின் அதிபர் வேட்பாளரை மாற்றவேண்டும் என ஜனநாயக கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர்.

    இதையடுத்து அதிபர் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக ஜோ பைடன் தெரிவித்தார். மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசை முன்மொழிவதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது பரப்புரையை கமலா ஹாரிஸ் தொடங்கினார். அவருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக பலர் ஆதரிக்கத் தொடங்கியதும், அமெரிக்காவின் தேர்தல் களம் தலைகீழாக மாறியுள்ளது.


    பிரசாரத்தை தொடங்கிய ஒருவார காலத்தில் கமலா ஹாரிஸ் தேர்தல் நிதியாக 200 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1674 கோடி) தொகையை திரட்டியுள்ளார்.

    இந்த நிதியை வழங்கியுள்ளவர்களில் 66 சதவீதம் பேர் முதல் முறையாக நன்கொடை அளிப்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அதிபர் தேர்தல் குறித்து புதிய கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் 2 சதவீதம் அதிக புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருப்பதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த கருத்துக் கணிப்பின்படி கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவும் டிரம்ப் 42 சதவீத ஆதரவும் பெற்றுள்ளனர். நாளுக்கு நாள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

    இந்த கருத்துக்கணிப்பு டொனால்ட் டிரம்புக்கு எதிரான அமெரிக்கர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது டிரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    போட்டி நிறைந்த மாகாணங்களில் மிக சொற்ப அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.

    ×