என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amalalopvam school"

    • தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • பள்ளியில் 100 சதவீத தேர்ச்சிக்கு வித்திட்ட அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    பிளஸ்-2 ேதர்வு முடிவு  வெளியானது.  புதுவை அமலோற்பவம் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 761 மாணவர்கள் எழுதினர்.அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    28-ம் ஆண்டாக பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் குறித்து சீனியர் பிரின்சிபல் லூர்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளஸ்-2 தேர்வில் பள்ளி அளவில் 600-க்கு 595 மதிப்பெண் பெற்று சரவணன் என்ற மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். 594 மதிப்பெண் பெற்று சஞ்சய், சீனு என்ற 2 மாணவர்கள் 2-ம் இடம் பெற்றுள்ளனர்.

    593 மதிப்பெண் பெற்று அபினாஷ், ரோஷிணி ஆகி யோர் 3-ம் இடம் பெற்றுள் ளனர். ஒட்டுமொத்தமாக பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் 480 பேர் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்ணும், 738 பேர் 60 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    550 மதிப்பெண்ணிற்கு மேல் 78 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 256 மாணவர்களும் பெற்றுள்ளனர். பாடப்பிரிவு களில் 100-க்கு 100 மதிப்பெண்களை 77 பேர் பெற்றுள்ளனர்.

     பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர் சரவணனுக்கு 8 கிராம் தங்க காசும், 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு 4 கிராம் தங்க காசும், 3-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு 2 கிராம் தங்க காசும் பரிசாக வழங்கப்படும். பள்ளியில் 100 சதவீத தேர்ச்சிக்கு வித்திட்ட அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீடு வீடாக சென்று விழிப்புணர்வூட்டும் பிரசாரத்தை கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.
    • தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக தெருக்கள் மற்றும் வீடுகளைச் சுற்றி பள்ளி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி, புதுவை நகராட்சி, மாநில அரசின் மலேரியா,பைலேரியா நோய்த் தடுப்புத் துறை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது.

    இந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை பள்ளி முதல்வர் லூர்து சாமி வரவேற்று பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். புதுவை மாநில என்.எஸ்.எஸ். அலுவலர் சதீஷ்குமார். சிறப்புரையாற்றினார்.

    புதுச்சேரி திப்ரா யன்பேட்டை பகுதியில் உள்ள நகரப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆனந்தி டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் டெங்கு தடுப்பு முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து ரைத்தார். நகராட்சி டாக்டர் துளசிராமன் குடியிருப்பு பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் டெங்கு பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறினார்.

    புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் டெங்கு காய்ச்சலைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பள்ளி மற்றும் சுகாதாரத் துறையின் முயற்சிகளைப் பெரிதும் பாராட்டியதுடன், வீடு வீடாக சென்று விழிப்புணர்வூட்டும் பிரசாரத்தை கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

    பள்ளியின் என்.எஸ்.எஸ். மாணவர்கள் 150 பேர் கலந்து கொண்ட இவ்விழிப்பு ணர்வு பிரச்சாரத்தில், வாணரப்பேட்டை பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான அறிவுரைகளை பொது மக்களுக்கு வழங்கினார்.

    டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை குறித்த தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர்களையும் மாணவர்கள் பொது மக்களிடையே விநியோகித்தனர்.

     மேலும், மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவும். கொசு உற்பத்தி யாகும் சூழலைக் கட்டுப்ப டுத்தவும் அறிவு றுத்தினர். தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக தெருக்கள் மற்றும் வீடுகளைச் சுற்றி பள்ளி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    • புதுவை அமலோற்பவம் பள்ளி, ஒரு மணி நேரத்தில் அதிகப்படியான விதைப் பந்துகளை உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளது.
    • ஒரு மணி நேரத்தில் 75 ஆயிரம் விதைப் பந்துகள் உருவாக்கி, அவற்றை தேசியக் கொடியின் அசோக சக்கரம் வடிவில் அமைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அமலோற்பவம் பள்ளி, ஒரு மணி நேரத்தில் அதிகப்படியான விதைப் பந்துகளை உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளது.

    நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவு அமுதப் பெரு விழாவைக் கொண்டாடும் விதமாக, அமலோற்பவம் பள்ளி

    என்.எஸ்.எஸ்., குழுவினர் 240 பேர் ஆரம்பப் பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தினர்.

    இதில், ஒரு மணி நேரத்தில் 75 ஆயிரம் விதைப் பந்துகள் உருவாக்கி, அவற்றை தேசியக் கொடியின் அசோக சக்கரம் வடிவில் அமைத்தனர். கொன்றை, வாகை, பூவரசு, வில்வம், வேம்பு, நாவல், சப்போட்டா, எலுமிச்சை உள்ளிட்ட விதைகள் அடங்கிய விதைப் பந்துகள் உருவாக்கப்பட்டன.

    இவற்றை வனத்துறை, என்.எஸ்.எஸ், குழுக்களுக்கு வழங்கவும், மீதம் உள்ள விதைப் பந்துகளைப் பள்ளி என்.எஸ்.எஸ்., மூலம் நெடுஞ்சாலையோரம் தூவப்பட உள்ளது.

    இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் என்.எஸ்.எஸ்., ஒருங்கினைப்பாளர் டேவிட் வரவேற்றார். மாநில ஒருங்கி–ணைப்பாளர் மதிவாணன் தலைமை தாங்கினார்.

    தென்னிந்திய யுனிவர்சல் எக்கோ பவுண்டேசன் நிறுவன இயக்குநர் பூபேஷ் குப்தா பங்கேற்று, மாணவர்களின் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் உணவு அமைப்பு குறித்த புரிதலை பாராட்டினார். உலக சாதனைக்கான வெர்ச்சூ புத்தக நடுவர்கள் சுரேஷ் குமார், கார்த்திகேயன், வெங்கடேசன் ஆகியோர் விதைப் பந்து தயாரிப்பை பார்வையிட்டு, தங்கள் பதிவேட்டில் பள்ளியின் பெயரை சாதனைக்குரிய பெயராக பதிவு செய்தனர்.

    ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் செல்வநாதன் ஒருங்கின–ணைத்தார். என்.எஸ்.எஸ். ஒருங்கினணப்பாளர் சசிகலா நன்றி கூறினார்.

    இதுவைரை 40,144 விதைப்பந்துகளை உருவாக்கி சாதனைப் பட்டியலில் இருந்த பஞ்சாப் மாநில பள்ளியின் சாதனையை, அமலோற்பவம் பள்ளி முறியடித்தது குறிப்பிடதக்கது.

    ×