என் மலர்
நீங்கள் தேடியது "Alluvium"
- கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.
- தமிழ்நாடு அரசின் அனைத்து திட்ட பயன்களை யும் ஒற்றைசாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகபடுத்தப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் உமா பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை 165.78மி.மீ.மழை பெறப்பட்டுள்ளது.மே மாதம் முடிய இயல்பு மழையளவை விட 1.58 மி.மீ. அதிகமாக மழை பெறப் பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வரை நெல் 16.5 எக்டர், சிறுதானியங்கள் 221.52 எக்டர், பயறு வகைகள் 2 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 26.90 எக்டர், பருத்தி 704 எக்டர் மற்றும் கரும்பு 53 எக்டர் என மொத்தம் 1021.70 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிர்களில் மரவள்ளி 6 எக்டர் மற்றும் வாழை 2 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப் பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நெகிழி பைகள் உற்பத்தி செய்யும் இடங்களைக் கண்டறிந்து உற்பத்தி மற்றும் மொத்த விற்பனையை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 23 கண்மாய்களில் வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள தைத் தொடர்ந்து விவசாயி கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க விண்ணப்பங்களை அந்தந்த வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். தமிழ்நாடு அரசின் அனைத்து திட்ட பயன்களை யும் ஒற்றைசாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகபடுத்தப்பட்டு உள்ளது.
இந்த வலைதளத்தில் 13 துறைகள் இணைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் அரசின் அனைத்து திட்டங்களையும் ஒரே இடத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் பயன் அடைய நாமக்கல் மாவட்ட விவசாயிகள் ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பட்டா நகல், ஸ்மார்ட் கார்டு நகல், விவசாயிகளின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மற்றும் கைப்பேசி எண் முதலிய ஆவணங்களுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். இதில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலு வலர் மணிமேகலை, மோக னூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மல்லிகா, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மீராபாய், வேளாண்மை இணை இயக்குநர் துரை சாமி, கூட்டூறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறி யாளர் சிவக்குமார், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் முருகேசன், தோட்டக்கலைத் துணை இயக்குநர் கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், வேளாண்மை துணை இயக்குநர் ராஜகோபால், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ந டராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






