என் மலர்
நீங்கள் தேடியது "Allowances for workers"
- கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் வீட்டு வசதி திட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் பயன்பெறலாம்.
- பதிவு பெற்ற பெண் ஆட்டோ டிரைவர்கள், புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
சேலம்:
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து விதமான விண்ணப்பங்களையும் www.tnuwwb.tn.gov.in என்ற தொழிலாளர் துறையின் இணையதளத்தில் பெற்று கொள்ளலாம்.
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, குழந்தைகளின் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி வாங்குதல், இயற்கை மரணம், விபத்து மரணம் போன்றவற்றுக்கு உதவித்தொகையும், 60 வயது நிறைவடைந்தவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய நிதியுதவி தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் வீட்டு வசதி திட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் பயன்பெறலாம். பதிவு பெற்ற பெண் ஆட்டோ டிரைவர்கள், புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் திருநங்கைகளும் பயன்பெறலாம். இதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






