search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alanugulam"

    • கல்லூரி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
    • காலகாலமாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நேற்று திறக்கப்பட்டது. விழாவிற்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலர் டி.பிஎம். மைதீன்கான் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு சிறந்த மாநிலம்

    நிதி மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கல்லூரியை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் குத்துவிளக்கு ஏற்றினார். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒட்டு மொத்தமான கல்லூரி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. இந்தியாவில் இருக்க கூடிய மாநிலங்களில் ஏறத்தாழ 52 சதவீதம் உயர் கல்வியில் இடம் பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் உயர் கல்வியிலே தமிழ்நாடு பெற்றிருக்கிற உட்கட்டமைப்புக்கு மிக பெரிய சான்று இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. காலகாலமாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றார். தொடர்ந்து ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ம்வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், பழனிநாடார் எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி மாவட்ட ஊராட்சித்தலைவர் தமிழ்செல்வி போஸ், தென்காசி நகராட்சி தலைவர் சாதிக், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்டராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, மாரி வண்ணமுத்து, லாலா சங்கர பாண்டியன், கடற்கரை கிரஸ்டோபர், வக்கீல் சிவகுமார், ரஞ்சித் ஜெபராஜன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில தலைவர் பூங்கோதை ஆலடி அருணா வரவேற்றார். முடிவில் ஆலடி அருணா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பாலாஜி நன்றி கூறினார்.

    ×