என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "additional amount"
- ஓய்வுதியம் வழங்கும் நோக்கில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ.) செயல்பட்டு வருகிறது.
- வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ், ஊழியரின் அடிப்படை ஊதியத்திலிருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
சேலம்:
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்குப் பிறகு பணப்பலன்கள் மற்றும் ஓய்வுதியம் வழங்கும் நோக்கில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ.) செயல்பட்டு வருகிறது. இதன் கிளை நிறுவனம் சேலம் இரும்பாலை பகுதியில் உள்ளது.
இந்த நிலையில் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ், ஊழியரின் அடிப்படை ஊதியத்திலிருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதேபோல், நிறுவனமும் அவரது வருங்கால வைப்பு நிதி கணக்கில் 12 சதவீதம் செலுத்தும். இதில் நிறுவனம் செலுத்தும் 12 சதவீதத்திலிருந்து 8.33 சதவீத தொகை ஊழியரின் ஓய்வூதிய கணக்குக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, ஓய்வூதியம் பிடித்தம் செய்வதற்கான அடிப்படை ஊதிய வரம்பு ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. ஊழியர்கள் தங்களின் அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் இருப்பின் அவர்கள் விரும்பினால் அதற்குண்டான கூடுதல் வருங்கால வைப்பு நிதியை செலுத்த தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஊழியர்கள் கூட்டு உறுதிமொழி படிவத்தை தங்கள் நிறுவனம் வழியாக இ.பி.எப்.ஓ. அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்