என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Activists Security Team"

    • ஊராட்சி செயலாளா் மிரட்டல் விடுத்துள்ளாா்.
    • 10 ரூபாய் இயக்கம் மற்றும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    திருப்பூர் :

    ஆா்டிஐ. ஆா்வலா்கள் பாதுகாப்பு குழு சாா்பில் திருப்பூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சமூக ஆா்வலா் மோகன் தம்பி தலைமை வகித்தாா்.ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:-

    அவிநாசி ஒன்றியம், கருவலூா் ஊராட்சியில் ஆா்டிஐ சட்டத்தில் (தகவல் அறியும் உரிமை சட்டம்) தகவல் கேட்டவரை தொடா்பு கொண்டு ஊராட்சி செயலாளா் மிரட்டல் விடுத்துள்ளாா். ஆகவே ஊராட்சி செயலாளா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், 10 ரூபாய் இயக்கம் மற்றும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    ×