search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "acceptance of responsibility"

    • தாரமங்கலம் நகராட்சியில் (பொறுப்பு ) ஆணையாளராக பதவி வகித்து வந்தவர் ஸ்டாலின் பாபு.
    • ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த சேம் கிங்ஸ்டன் என்பவர் பதவி உயர்வு பெற்று தாரமங்கலம் நகராட்சிக்கு ஆணையாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் (பொறுப்பு ) ஆணையாளராக பதவி வகித்து வந்தவர் ஸ்டாலின் பாபு. இவர் மாறுதல் ஆன பிறகு புதிய ஆணையாளராக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த சேம் கிங்ஸ்டன் என்பவர் பதவி உயர்வு பெற்று தாரமங்கலம் நகராட்சிக்கு ஆணையாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். புதிய ஆணையாளருக்கு நகர மன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன். மற்றும் நகராட்சி அதிகாரிகளும் வார்டு கவுன்சிலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    • கள்ளக்குறிச்சியில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்றார்.
    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம். இவர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த தங்கமணி என்பவர் கரூர் மாவட்டத்திற்கு இடம் மாறுதல் செய்யப்பட்டார். இந்நிலையில்கள்ளக்குறிச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம். இவர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து நேற்று கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×