search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadukalam Kishore"

    லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் கிஷோர் - லவ்லின் சந்திரசேகர் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஹவுஸ் ஓனர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    நடிகர், இயக்குநர் என பன்முக திறமைகளை கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `ஹவுஸ் ஓனர்'. பசங்க கிஷோர் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஆடுகளம் கிஷோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    சென்னை வெள்ளத்தின் போது நடந்த ஒரு காதலை மையமாக வைத்து தீவிரமான காதல் கதையாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்த வரும் நிலையில், படம் வருகிற ஜூன் 21-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவையும், பிரேம் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.

    லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் ஹவுஸ் ஓனர் படத்தில் பசங்க கிஷோருக்கு ஜோடியாக பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நடித்து வருகிறார். #HouseOwner #Kishore
    நடிகர், இயக்குநர் என பன்முக திறமைகளை கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அசோக் செல்வன் - ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து ஹவுஸ் ஓனர் என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். 

    இந்த நிலையில், பசங்க படத்தில் நடித்த கிஷோர் மற்றும் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லினை வைத்து ஹவுஸ் ஓனர் என்ற தலைப்பில் புதிய படமொன்றை இயக்கி வருகிறார். படத்தில் ஆடுகளம் கிஷோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

    சென்னை வெள்ளத்தின் போது நடந்த ஒரு காதலை மையப்படுத்தி தீவிரமான காதல் கதையாக இந்த படத்தை உருவாக்குகிறார். படத்தில் பாடல்கள் கிடையாது. படம் குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பேசும் போது,



    " ஆரம்பத்தில், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து இதே 'ஹவுஸ் ஓனர்' என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுக்கும் யோசனை எனக்கு இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் முதல் டிராஃப்ட் மட்டுமே தயாராக இருந்ததால், அது தொடங்கப்படவில்லை. இதற்கிடையில், நடிகர்கள் அவர்களின் கடமைகளில் பிஸியாகி விட்டனர், மேலும் அவர்கள் தற்போதைய படங்களை முடித்து விட்டு தான் திரும்ப வருவார்கள். இது தவிர, என் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சொல்வதெல்லாம் உண்மை'யை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்கிரிப்டை 'ப்ளூ இன்க்' என்ற தலைப்பில் எழுதி வைத்திருந்தேன். ஜூன் 10ஆம் தேதி தொடங்க வேண்டிய படப்பிடிப்பு, ரியாலிட்டி ஷோ தற்காலிக தடை காரணமாக, முன்னோக்கி செல்ல தயக்கமாக இருந்தது. நாங்கள் `ஹவுஸ் ஓனர்' படத்தை ஆரம்பித்தோம் " என்றார்.

    இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக ஒரே கட்டமாக இரண்டாவது கட்ட படப்பிடிப்பை செப்டம்பருக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரேம் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். #HouseOwner #Kishore #Lovelyn 

    பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக `கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்திற்கு பிறகு பார்த்திபன் அடுத்ததாக இயக்கவிருக்கும் ‘உள்ளே வெளியே-2’ படத்தில் 10 பலமான நடிகர்களுடன் களமிறங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். #UlleVeliye2
    பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான ‘உள்ளே வெளியே’ படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. ‘உள்ளே வெளியே’  படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க பார்த்திபன் முடிவு செய்திருக்கிறார். 

    இந்த படத்தின் கதை தயாராகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்க இருக்கிறார். பிரபுதேவாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மம்தா மோகன்தாஸ், கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்  வெளியாகி இருக்கிறது. 



    இந்த நிலையில், பார்த்திபனுடன் நடந்த உரையாடலின் போது அவர் தெரிவித்ததாவது, 

    நான் தயாராக இருக்கிறேன். சரியான தயாரிப்பாளர் அமைவதற்காக பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. உள்ளே வெளியே 2, நான், சமுத்திரகனி, கிஷோர் என்று 10 பலமான நடிகர்களுடன் களம் இறங்குகிறேன். எதையும் நகைச்சுவையுடன் சொல்வதுதான் என் பாணி. அது இந்த படத்தில் இருக்கும். என்னுடைய வழக்கமான படத்தை பார்க்கலாம். ஆனால் அதிர்ச்சியான ஒரு வி‌ஷயமும் படத்தில் உண்டு. #UlleVeliye2 #Parthiban

    ×