search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A tree"

    • மரம் மின்சார கம்பிகள் மேல் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • மின்சாரத் துறையினர் மின்சார கம்பிகளை சரி செய்தனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கால நிலை மாற்றம் ஏற்பட்டு காற்றின் வேகம் அதிகமாக வீசி வருகிறது.

    இரவில் கோத்தகிரி மிளுதோன் செல்லும் சாலையில் சில்வர் ஊக் மரம் மின்சார கம்பிகள் மேல் சாய்ந்து அப்பகுதியில் வெகு நேரம் மின்சார துண்டிப்பு ஏற்பட்டது.

    உடனடியாக மின்சார துறையினர் கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து கோத்தகிரி நிலைய அலுவலர் கருப்புசாமி முதன்மை அலுவலர் மாதன் தலைமையிலான குழுவினர் மரத்தை வெட்டி அகற்றினர்.

    பின்பு மின்சாரத் துறையினர் மின்சார கம்புகளை சரி செய்து அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கினர். 

    • 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • தகவலின்பேரில் கூடலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளியில் மழை காரணமாக இரவில் சாலை ஓரம் இருந்த மரம் ரோட்டின் குறுக்கே விழுந்தது.

    இதனால் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கூடலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலின்பேரில் கூடலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையின் குறுக்கே கிடந்த மரத்தை வெட்டி அகற்றினா். இதையடுத்து போக்குவரத்து சீரானதை அடுத்து வாகனங்கள் வழக்கம்போல் இயங்கியது.

    ×