search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "a sensation"

    • காலிங்கராயன் வாய்க்காலில் மிதந்து வந்த உடலை கைப்பற்றினர்.
    • கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சதம்பூர் கிராமத்தில் காலி ங்கராயன் வாய்க்காலில் சம்பவத்தன்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதந்து வருவதாக மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் காலிங்கராயன் வாய்க்காலில் மிதந்து வந்த உடலை கைப்பற்றினர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    அந்த நபரின் உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் வாய்க்காலில் குளித்த போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டா ரா என்று தெரிய வில்லை.

    இது குறித்து மொடக்கு றிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×