என் மலர்
நீங்கள் தேடியது "A. Raza MP speech"
- கலைஞர் நூற்றாண்டு விழா நினைவுத்தூண் திறந்து வைக்கப்பட்டது.
- எதிர்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் அவர்களது ஒலிபெருக்கி இணைப்பை துண்டித்து விட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவுத்தூண் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழா நடந்தது. விழாவுக்கு ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை தாங்கினார்.
விழாவில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா கலந்து கொண்டு கலைஞர் நூற்றாண்டு விழா நினைவுத்தூணை திறந்து வைத்து, கட்சி கொடியேற்றி வைத்தார். அதனை தொடர்ந்து.பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.
இதேபோல் கோத்தகிரி ஒன்றிய தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் கோத்தகிரி ஜக்கனாரை பள்ளியில் நடந்த விழாவிலும் பங்கேற்று, 500 மலைவாழ் மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-
பாராளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் பேசியபோது, எதிர்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் அவர்களது ஒலிபெருக்கி இணைப்பை துண்டித்து விட்டனர்.
அந்தளவுக்கு பா.ஜ.கவினர் ஜனநாயகத்திற்கு எதிராக நடந்து கொள்கின்றனர்.பா.ஜ.க ஆட்சியில் மதவெறி உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் திராவிட மொழிகளைக் கொண்ட ஆட்சி நடைபெறுகிறது. திராவிடம் என்பது மதத்திற்கும், சாதிக்கும் எதிரானது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடியை வீட்டிற்கு அனுப்ப இந்தியர்களாகிய நாம் ஒன்றிணைய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட செயலாளர் முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் தம்பி இஸ்மாயில், எல்கில் ரவி, செல்வராஜ், ரீட்டா மேரி, பிரியா வினோதினி, மேரி பிளோரீனா, திவ்யா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எம்.பி. ஆ.ராசா திமுக துணை பொதுச் செயலாளராக 2-வது முறையாக தோ்வு செய்யப்பட்ட பின்னா் முதன்முறையாக நீலகிரிக்க வந்தார்.
- ஊட்டியில் உள்ள உள்ளாட்சி பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா திமுக துணை பொதுச் செயலாளராக 2-வது முறையாக தோ்வு செய்யப்பட்ட பின்னா் முதன்முறையாக நீலகிரிக்க வந்தார்.
அவருக்கு குன்னூரில் மாவட்ட நகர செயலாளர் ராமசாமி தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகர மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா, பொதுகுழு உறுப்பினர்கள் காளி தாஸ்,செல்வம், நகரதுணை செயலாளர் வினோத், பொருளாளர் ஜெகநாதராவ், நகரமன்ற உறுப்பினர்கள் ஜாகிர்கான், மணி, மன்சூர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து அவர் ஊட்டிக்கு சென்றார். அங்கும் தி.மு.க.நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது அவர் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-
எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் பிரதமரை ஸ்டாலின்தான் தீா்மானிப்பாா். உலக வங்கி மூலம் தமிழகத்தில் 10 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டன. இதில், ஊட்டியில் மருத்துவக் கல்லூரியை நான் கொண்டு வந்தேன்.நீலகிரியில் டேன்டீ நிறுவனம் மூடப்படும் நிலையில் இருந்தது. அந்த சூழலில் ஆட்சிக்கு வந்த தி.மு.க, உடனடியாக இந்நிறுவனத்தை புனரமைக்க ரூ.70 கோடி ஒதுக்கியது. கூடலூா், குன்னூா், ஊட்டியில் உள்ள உள்ளாட்சி பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வரன்முறைப்படுத்த முதல்-அமைச்சரிடம் கோரியுள்ளோம்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஊட்டியில் ஐ.டி. பாா்க் அமைக்கப்படும். அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட மக்களுக்காக வெற்றி பெற்றாலும் சரி, இல்லையென்றாலும் சரி தொடர்ந்து இந்த பகுதிகளுக்கு வந்து மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்த்து வைப்போம்.
நான் எப்போதும் நீலகிரி பாராளுமன்ற மக்களின் பிள்ளையாக திகழ்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், நீலகிரி மாவட்ட திமுக செயலாளா் பா.மு.முபாரக், துணை செயலாளா் ஜே.ரவிக்குமாா், நகர செயலாளா் ஜாா்ஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் முஸ்தபா, நகர பொருளாளா் நாசா் அலி உட்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக கூடலூருக்கு சென்ற ஆ.ராசா, பழைய பஸ் நிலையம் சந்திப்பு பகுதியில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினாா். தொடா்ந்து காந்தி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசுகையில், கூடலூா் தொகுதியில் பிரிவு-17 நிலப் பிரச்னை, பத்தாயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் விரைவில் தீா்வு காணப்படும் என்றாா்.






