என் மலர்
நீங்கள் தேடியது "A medical camp was held"
- 475 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது
- எராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை ஆகியவை சார்பில் நடந்த இந்த முகாமை வந்தவாசி ஒன்றியக்குழுத் தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம் தொடக்கி வைத்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சு.வி.மூர்த்தி, ஆர்.குப்புசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி செயலர்கள், மக்கள் நல பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன், தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
முகாமில் மொத்தம் 475 பேருக்கு அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய மருந்துகள் வழங்கப்பட்டன.
- புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் அடுத்துள்ள புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமினை புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரபியுல்லா, பி.பி.முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் அரசு அலுவலர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எக்ஸ்ரே உள்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து ஆலோசனைகளும், சிகிச்சையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






