என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு அலுவலர்களுக்கான மருத்துவ முகாம்
- புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் அடுத்துள்ள புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமினை புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரபியுல்லா, பி.பி.முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் அரசு அலுவலர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எக்ஸ்ரே உள்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து ஆலோசனைகளும், சிகிச்சையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






