என் மலர்
நீங்கள் தேடியது "A garter snake was"
- தண்ணீர் தொட்டியின் மீது பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.
- தீயணைப்பு வீரர்கள் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள எம்.ஜி.ஆர்., நகர் 3-வது வீதியில் வீட்டில் மூடப்பட்டுள்ள தரை தள தண்ணீர் தொட்டியின் மீது பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.
இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
நிலைய அலுவலர் சதீஸ்குமார் தலைமயைில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பாம்பு பிடிக்கும் கருவியின் உதவியுடன் பாம்பை உயிருடன் பிடித்தனர்.
5 அடி நீளம் கொண்ட அந்த கட்டு விரியன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.






