என் மலர்
நீங்கள் தேடியது "a drain died"
- மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று திடீரென புஷ்பா மாயமானார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே உள்ள காதகிணறு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி புஷ்பா (47). கூலி வேலை செய்து வருகிறார்.
இவர் ஏற்கனவே வலிப்பு நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென புஷ்பா மாயமானார். புஷ்பா மாயமானதை அடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் பட்டாசுப்பாளி அருகே உள்ள எல்.பி.பி வாய்க்காலில் புஷ்பாவின் உடல் கரை ஒதுங்கி இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் புஷ்பாவின் உடல் மீட்கப்பட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






