search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sai Praneeth"

    • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று காலிறுதி போட்டி நடந்தது.
    • இதில் இந்தியாவின் சாய் பிரனீத் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    பாங்காங்:

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத், சீனாவின் லீ ஷீ பெங்குடன் மோதினார்.

    முதல் செட்டை சீன வீரர் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சாய் பிரனீத் வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை லீ ஷீ பெங் தனதாக்கினார்.

    இறுதியில், சீன வீரர் 21-17, 21-23, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த தோல்வியின் மூலம் சாய் பிரனீத் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • 2-வது சுற்றில் இந்திய வீரர் சாய் பிரணீத், கொரிய வீரர் ஹியோக் ஜின் ஜியோனுடன் மோதினார்.
    • சாய் பிரணீத் கால் இறுதியில் சீனாவின் லீஷிபெங்யு டன் மோதுகிறார்.

    பாங்காக்:

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதன் 2-வது சுற்றில் இந்திய வீரர் சாய் பிரணீத், கொரிய வீரர் ஹியோக் ஜின் ஜியோனுடன் மோதினார்.

    இதில் சாய் பிரணீத் 24-22, 7-21, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் சீனாவின் லீஷிபெங்யு டன் மோதுகிறார்.

    • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று இரண்டாவது சுற்று போட்டி நடந்தது.
    • இதில் இந்தியாவின் சாய் பிரனீத் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    பாங்காங்:

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த காலிறுதிக்கு முந்திய சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத், தென் கொரியாவின் ஜின் ஜியோனை எதிர்கொண்டார்.

    முதல் செட்டை சாய் பிரனீத் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை ஜியோன் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்டு ஆடிய சாய் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை தனதாக்கினார்.

    இறுதியில், சாய் பிரனீத் 24-22, 7-22, 22-20 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத்தும் காலிறுதிக்கு முன்னேறினர். #IndianOpenBadminton #PVSindhu
    புதுடெல்லி:

    இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 18-21, 21-16, 21-15 என்ற செட் கணக்கில் சக வீரர் சமீர் வர்மாவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 21-11, 21-13 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் தனோன்சாக்கை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் பிரனாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-11, 21-13 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீராங்கனை டெங் ஜாய் சுவானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். #IndianOpenBadminton #PVSindhu


    ×