search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paneer Recipes"

    • பிள்ளைகளுக்கு மதிய உணவிற்கு இதை செய்து கொடுக்கலாம்.
    • 20 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து முடிக்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்

    பன்னீர் - 200 கிராம்

    புதினா - 1 கட்டு

    கிராம்பு - 4

    பட்டை - 1 இன்ச்

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    தண்ணீர் - 4 கப்

    செய்முறை :

    பன்னீரை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    புதினாவை நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    அரிசியை நன்கு கழுவி உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை 3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்திருக்கின்ற புதினா மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.

    புதினா பச்சை வாசனை போனவுடன் இறுதியில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் பிரட்டி, இறக்கி விட வேண்டும்.

    தற்போது சுவை நிறைந்த புதினா பன்னீர் புலாவ் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகள் தினமும் வெரைட்டியாக சாப்பிட ஆசைப்படுவாங்க.
    • குழந்தைகளுக்கு இந்த தோசையை செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    தோசைமாவு - தேவையான அளவு

    பன்னீர் - 2 கப்

    குடை மிளகாய் - 1

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 1

    மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன்

    சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்

    பட்டர் - தேவையான அளவு

    கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துருவிக் கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து உருகியதும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து நன்கு சாஃப்ட் ஆகும் வரை வதக்க வேண்டும்.

    பிறகு, அதில் தக்காளி சேர்த்து வதங்கியதும் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா வதக்கி கொள்ள வேண்டும்.

    இப்பொழுது அதில், துருவிய பன்னீரை சேர்த்து கொள்ளலாம்.

    தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது பன்னீர் மசாலா ரெடியாகி விட்டது. இதை தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை எடுத்து தோசை போல் ஊற்றி அதன் மேல் நெய் சேர்த்து நன்கு மொறு மொறுப்பாகும் வரை வேக விட வேண்டும்.

    இப்பொழுது தோசையின் மேல் பன்னீர் மசாலாவை சேர்க்க வேண்டும். அதன் மேல் சிறிது பட்டர் வைத்துக் கொள்ளலாம். தோசை வெந்ததும் இரண்டாக மடித்து தட்டில் மாற்ற வேண்டும்.

    இப்போது சூப்பரான பன்னீர் மசாலா தோசை ரெடி.

    இதனுடன் தேங்காய் சட்னி சேர்த்து பரிமாறினால் நன்றாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பன்னீரில் அதிகம் கால்சியம் இருப்பதால் பற்கள், எலும்புகளை வலுவாக்க உதவும்.
    • பன்னீரில் அதிகளவு ஊட்டச்சத்துக்களும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 200 கிராம்,

    பெரிய வெங்காயம் -3,

    தக்காளி - 4,

    இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,

    மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்,

    தனியா தூள் - 1 டீஸ்பூன்,

    கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்,

    வெண்ணெய் - 50 கிராம்,

    ஃப்ரெஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்

    காய்ந்த வெந்தயக் கீரை - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    பன்னீரை சிறு துண்டுளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருகியதும் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, தீயை 'ஸிம்'மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.

    பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள்.

    கடைசியாக, பன்னீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள்.

    ஃப்ரெஷ் கிரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.

    குழந்தைகள் விரும்பும் சத்தான சைடிஷ், இந்த பன்னீர் பட்டர் மசாலா!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பன்னீரில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்தனுப்ப சூப்பரான ரெசிபி இது.

    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 5,

    பன்னீர் துருவல் - கால் கப்,

    கேரட் துருவல் - சிறிதளவு,

    நறுக்கிய குடைமிளகாய் - சிறிதளவு,

    வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்),

    தக்காளி சாஸ், சோயா சாஸ் - தலா 2 டீஸ்பூன்,

    வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு உருகியதும் வெங்காயம், பன்னீர் துருவல், குடைமிளகாய், கேரட் துருவல், உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கி இறக்கவும்.

    தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய் விட்டு உருகியதும், சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் சூடு செய்து எடுக்கவும்.

    சப்பாத்தியின் ஓரத்தில் தயாரித்து வைத்துள்ள பன்னீர் கலவையை வைத்து, சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்பவும்.

    சூப்பரான பன்னீர் ஃப்ராங்கி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பன்னீரில் புரதச்சத்து அதிகம் உள்ளது.
    • நீரிழிவு உள்ளவர்களும்கூட பன்னீரை தைரியமாக சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஊற வைப்பதற்கு...

    பன்னீர் - 200 கிராம்

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    தயிர் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    மாவிற்கு...

    மைதா - 3 டேபிள் ஸ்பூன்

    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    சமையல் சோடா - 1 சிட்டிகை

    உப்பு - சுவைக்கேற்ப

    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை:

    * ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொண்டு, அத்துடன் 'ஊற வைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

    * மற்றொரு பௌலில் 'மாவிற்கு' கொடுத்துள்ள பொருட்களை எடுத்து நன்கு கலந்து, பின் சிறிது நீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். மாவானது மிகவும் நீராகவோ அல்லது கெட்டியாகவோ இருக்கக்கூடாது. இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    * எண்ணெய் சூடானதும், ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    * இதேப் போல் அனைத்து பன்னீர் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் 65 தயார்.

    குறிப்பு:

    * அனைத்து பன்னீர் துண்டுகளையும் ஒரே நேரத்தில் மாவில் போட்டு விட வேண்டாம். இல்லாவிட்டால், பன்னீர் எளிதில் உடைத்துவிடும்.

    * உங்களுக்கு மைதா சேர்க்க பிடிக்காவிட்டால், அதற்கு பதிலாக சோள மாவு மற்றும் அரிசி மாவு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 150 கிராம்,

    அரிசி மாவு - 25 கிராம்,

    மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - தேவையான அளவு.

    ஸ்டஃப்பிங் செய்ய:

    உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசிக்கவும்),

    பன்னீர் துண்டுகள் - 50 கிராம்,

    தனியா தூள் - ஒரு டீஸ்பூன்,

    கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,

    நறுக்கிய கொத்த மல்லித்தழை, பச்சை மிளகாய் - சிறிதளவு,

    எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிதளவு.

    செய்முறை:

    ஸ்டஃப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு கலந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து நீர்விட்டு தோசை மாவைவிட சற்று தளர்வாக கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் தயார் செய்து வைத்த உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பன்னீர் - ஆலு ஸ்டஃப்டு போண்டா ரெடி.

    • பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும்.
    • இது பற்கள், எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

    தேவையான பொருட்கள்

    பன்னீர் - 200 கிராம்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    பூண்டு - 2 பல்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    இஞ்சி - சிறிய துண்டு

    சீரகம் - 1 டீஸ்பூன்

    கடுகு - ½ டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    * பூண்டை தோல் நீக்கி நசுக்கிகொள்ளவும்.

    * ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    * ஒரு ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம், சேர்த்து தாளிக்கவும்.

    * பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் நசுக்கிய பூண்டு, இஞ்சி துருவல், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

    * பிறகு துருவி வைத்துள்ள பன்னீர் சேர்த்து அதனுடன் மிளகுத் தூள், சேர்த்து கிளறி கொத்தமல்லி தலை தூவி இறக்கவும்.

    * இப்பொழுது சுவையான பன்னீர் பொடிமாஸ் தயார்.

    • பன்னீரில் கால்சியம் நிறைந்துள்ளது.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    வறுக்க:

    தனியா - 2 1/2 டேபிள் ஸ்பூன்

    காஷ்மீர் மிளகாய்- 12

    வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்

    மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 1 டேபிள் ஸ்பூன்

    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 200 கிராம்

    தயிர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    புளி - எலுமிச்சை அளவு

    தனியா தூள் - அரை டீஸ்பூன்

    வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்

    நெய் - தேவையான அளவு

    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    செய்முறை

    புளியை சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாகநறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    காஷ்மீர் மிளகாவை 1மணி நேரம் சூடு தண்ணிரில் போட்டு ஊற வைக்கவும்.

    வாணெலியில் வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக தனித்தனியாக போட்டு பச்சை வாசனை போகும் வரை வறுத்து ஆற வைக்கவும்.

    மிக்ஸி ஜாரில் ஊறவைத்த மிளகாய், வறுத்த தனியா, வெந்தயம், மிளகு, சீரகம், காஷ்மீர் மிளகாய், கடுகு, 1 1/2 தயிர், புளிக்கரைசல் மற்றும் வெல்லம் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்.

    வாணெலியில் நெய்யை ஊற்றி சூடானதும் பன்னீரை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    வாணெலியில் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அரைத்த வைத்த பேஸ்டை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தேவையான உப்பு சேர்த்து 3 ஸ்பூன் நெய் ஊற்றி 5 நிமிடம் நன்றாக கிளற வேண்டும்.

    பின் தனியா தூள், கொத்தமல்லி தழையை சேர்க்கவும்.

    அத்துடன் வறுத்த பன்னீர் சேர்த்து பொறுமையாக கிளற வேண்டும்.

    கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி விட வேண்டும்.

    இப்போது சுவையான பன்னீர் நெய் ரோஸ்ட் ரெடி.

    • பன்னீரில் அதிக கால்சியம் சத்து உள்ளது.
    • சாப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    பன்னீர் - 200 கிராம் 

    வெங்காயம் -1 

    இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன் 

    மிளகாய் தூள் -1 ஸ்பூன் 

    சீரகம் -1 ஸ்பூன் 

    மல்லித் தூள் -1 ஸ்பூன் 

    சீரகப் பொடி -2 ஸ்பூன் 

    மஞ்சள் தூள் -1 ஸ்பூன் 

    கரம் மசாலா -1ஸ்பூன். 

    முந்திரி - 3 ஸ்பூன் 

    பாதாம் -3 ஸ்பூன் 

    உலர்ந்த வெந்தய இலைகள் -1 ஸ்பூன் 

    க்ரீம் - ½ கப் 

    எண்ணெய் - 4 ஸ்பூன் 

    உப்பு -தேவையான அளவு 

    சர்க்கரை -1 ஸ்பூன் 

    செய்முறை:

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஓரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் பன்னீரை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். 

    பின்னர் வறுத்த பன்னீரை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும்.15 நிமிடம் கழித்து, தண்ணீரை பிழிந்து தனி பாத்திரத்தில் பன்னீரை மாற்றவும். 

    முந்திரி, பாதாமை நீரில் 15 நிமிடம் ஊறவைத்து மிக்சியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும். 

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்த்து பச்சை வாசனை விலகும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும். 

    அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா, அரைத்த முந்திரி, பாதாம் பேஸ்ட், உப்பு ஆகியவை சேர்த்து கிளறி விடவும். 

    அடுத்து அதில் தேவையான நீர் சேர்த்து பன்னீரை போட்டு மிதமான சூட்டில் 20 நிமிடம் வேக வைக்கவும். 

    கடைசியில் உலர்ந்த வெந்தய கீரை மற்றும் க்ரீமை சேர்த்து கிளறி இறக்கினால் சூடான மலாய் பன்னீர் ரெடி...

    • குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் இது.
    • இதை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள்:

    பச்சை பட்டாணி - 3/4 கப்

    அரிசி மாவு - 1/2 கப்

    கடலை மாவு - 1/2 கப்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 2

    பன்னீர் - 1/4 கப்

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பௌலில் மசித்த பச்சை பட்டாணியை போட்டு, அத்துடன் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பன்னீர், உப்பு, மற்றும் தண்ணீர் ஊற்றி, சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

    பின் அந்த கலவையை கட்லெட் போல், தட்டையாகவும் சற்று தடிமனாகவும் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டை, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இதேப் போல் அனைத்து மாவையும் வேக வைத்து எடுத்தால், பச்சை பட்டாணி பன்னீர் கட்லெட் ரெடி!!!

    இதனை தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    • இந்த ரெசிபி வெளியே மொறு மொறு என்றும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.
    • சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 200 கிராம்

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    மிளகு தூள் - ½ தேக்கரண்டி

    சோள மாவு - 5 தேக்கரண்டி

    ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறை - 100 கிராம்

    பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    தண்ணீர் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    பன்னீரை சிறிய சதுர வடிவ துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகள், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை, சிறிது மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் மீதமிருக்கும் மிளகு தூள், சோள மாவு, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் தோசை மாவு பதத்தில் கலக்கிக்கொள்ளவும்.

    பின்னர் மசாலா கலந்திருக்கும் பன்னீர் துண்டுகளை, சோளமாவு கலவையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையில் புரட்டி எடுத்து, மீண்டும் சோளமாவு கலவையில் தோய்த்து, எண்ணெய்யில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

    இப்போது சுவையான மொறு மொறு பன்னீர் பாப்கார்ன் தயார்.

    இதை தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    • பன்னீரில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவும்.
    • தினசரி பன்னீர் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பன்னீர் - 300 கிராம்

    ஷாஹி ஜீரா - 1 தேக்கரண்டி

    வெங்காயம் - 2

    தக்காளி - 6

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

    காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி

    சீரக தூள் - 1 தேக்கரண்டி

    தனியா தூள் - 1 தேக்கரண்டி

    கடலை மாவு - 2 தேக்கரண்டி

    மிளகு தூள் - அரை தேக்கரண்டி

    தயிர் - 1 மேசைக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

    சர்க்கரை - 1 தேக்கரண்டி

    கஸ்தூரி மேத்தி - சிறிதளவு

    பச்சை மிளகாய் - 5

    இஞ்சி நீளவாக்கில் - சிறிய துண்டு

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு, நெய், எண்ணெய் - தேவைக்கேற்ப

    தாளிக்க

    பட்டை

    கிராம்பு

    பச்சை ஏலக்காய்

    கருப்பு ஏலக்காய்

    அன்னாசி பூ

    பிரியாணி இலை

    செய்முறை:

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்

    தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சி, ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் நறுக்கிய பன்னீரை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் நெய்யில் வறுத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ, ஷாஹி ஜீரா, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், கடலை மாவு, உப்பு சேர்த்து கலந்துவிடவும்.

    பின்பு அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி பச்சை வாசனை போய் சுருண்டு வரும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் அடித்த தயிர், கரம் மசாலா தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட்ட பின்னர் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    அடுத்து மசாலாவில் கஸ்தூரி மேத்தி, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

    கடைசியாக வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் குறைந்த தீயில் வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்..

    இப்போது தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார்.

    ×