search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nehru MLA"

    • நேரு எம்.எல்.ஏ. ஆய்வு
    • மழை காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை புதுப்பாளையம் வார்டு அருந்ததி நகர் திருவள்ளுவர் சாலை பகுதியில் பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்டை பிரிவின் மூலம் பிரதான மழை நீர் வடிகால் வாய்க்கால் மேல் சிமெண்ட் சிலாப் அமைக்கும் பணியை நேரு எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வரும் மழை காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    ஆய்வின் போது பொதுப்பணித் துறை நீர்ப்பாசன கோட்டப்பிரிவு செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சம்பந்தம், இளநிலை பொறியாளர் கணேஷ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி வீட்டுக்கு திரும்பிய நேரு மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார்.
    • துணை சபாநாயகர் ராஜவேலு உடல்நலக்கு றைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    புதுச்சேரி:

    புதுவை உருளை யன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ நேரு. கடந்தவாரம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நேரு சென்னை தனியார் மருத்துவ மனையில் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி வீட்டுக்கு திரும்பிய நேரு மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இதனிடையே சில நாட்களாக அவருக்கு தொடர் காய்ச்சல் இருந்தது.

    இதையடுத்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட தனியார் மருத்துவமனைக்கு அவர் சென்றார். அவருக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஏற்கனவே சென்னையில் துணை சபாநாயகர் ராஜவேலு உடல்நலக்கு றைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேரு எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
    • நமச்சிவாயம் இளநிலை பொறியாளர் குப்புசாமி மற்றும் நகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை வார்டு முல்லை நகர் சேரன் வீதியில் பழைய சாலையை மாற்றி புதிய சிமெண்டு சாலை மற்றும் இருபுறம் வாய்க்கால் அமைக்க எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

    புதுவை நகராட்சி மூலம் பணிகள் தொடங்க பூமி பூஜை நடந்தது.நேரு எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் புதுவை நகராட்சி ஆணையர் சிவகுமார், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன் உதவி பொறியாளர் நமச்சிவாயம் இளநிலை பொறியாளர் குப்புசாமி மற்றும் நகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் பலர் கலந்து கொண்டனர்.

    • பழுதடைந்த பழையதார் சாலைகளை மாற்றி புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • ஆய்வின்போது சிமெண்ட் சாலைகள் தரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலை அடிகள் சாலை யில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு மூலம் பழுதடைந்த பழைய தார் சாலையை மாற்றி புதிய தார் சாலை அமைக்கும் பணி மற்றும் காங்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளையும் மேலும் இளங்கோ நகர் வார்டு பகுதியான கென்னடி நகர் பகுதியில் உள்ள லயன்ஸ்கிளப் வீதியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு மூலம் பழுதடைந்த பழையதார் சாலைகளை மாற்றி புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் வாய்க்கால் கட்டும் பணி மற்றும் மழை காலங்களில் மழைநீர் பகுதியில் தேங்காதவாறு எளிதாக வெளியேறும் வகையில் வாட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது சிமெண்ட் சாலைகள் தரமான முறையில் அமைக்கப்பட்டு ள்ளதா? என்பதை குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பன்னீர்செல்வம், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம், நகராட்சி இளநிலை பொறியாளர் குப்புசாமி மற்றும் அரசு அதிகாரிகள், மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிள் பலர் உடனிருந்தனர்.

    • ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெறும் பிரிவுக்கு வரும் புறநோயாளிகள் பயன்பெறும் விதமாக அதனருகில் உணவகம் செயல்பட்டு வந்தது.
    • நோயாளிகள் வெகு தொலைவில் சென்று அவர்களுக்கு தேவையான உணவுகளை பெற நேரிடுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு ஜிப்மர் இயக்குனருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் நீரிழிவு நோயால் கிட்னி பாதிக்கப்பட்டு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெறும் பிரிவுக்கு வரும் புறநோயாளிகள் பயன்பெறும் விதமாக அதனருகில் உணவகம் செயல்பட்டு வந்தது. தற்போது அந்த உணவகம் கடந்த மூன்று மாதமாக செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் நீரிழிவால் கிட்னி பாதிக்கப்பட்டு ரத்த சுத்திகரிப்பு செய்யும் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் உடல் சோர்வு ஏற்பட்டவுடன் அவர்களுக்கு உடனடியாக உணவோ, பருக உகந்த பானமோ உடனடியாக கிடைக்க செய்ய வேண்டும்.

    ஆனால் அந்த உணவகம் மூடப்பட்டிருப்பதால் நோயாளிகள் வெகு தொலைவில் சென்று அவர்களுக்கு தேவையான உணவுகளை பெற நேரிடுகிறது. இதனால் அவர்கள் மிகவும் சோர்வடைந்து மயங்கி விழும் நிலை உள்ளது.

    ஆகையால் மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு நீரிழிவு நோயால் கிட்னி பாதிக்கப்பட்டு ரத்த சுத்திகரிப்பு செய்ய வரும் நூற்றக்கணக்கான நோயாளிகளுக்கு உதவும் விதமாக அங்கு செயல்பட்டு வந்த உணவகத்தை உடனடியாக திறக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாணவர்களுக்கும் காமராஜர் பிறந்த நாளைவிழாவை முன்னிட்டு காலணி மற்றும் புத்தகப் பை வழங்கப்பட்டது.
    • மனிதநேய மக்கள் சேவை இயக்க மூத்த நிர்வாகிகள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    புதுச்சேரி:

    கோஜிரியோ கராத்தே சங்கம் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சார்பில் உருளையன் பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ராஜா நகரில் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் காமராஜர் பிறந்த நாளைவிழாவை முன்னிட்டு காலணி மற்றும் புத்தகப் பை வழங்கப்பட்டது.

    இதில் உருளை யன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும் மனித நேயம் மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு, புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு காலணி மற்றும் பள்ளி புத்தகப்பையை வழங்கினர்.

    விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மனிதநேய மக்கள் சேவை இயக்க மூத்த நிர்வாகிகள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    • அதிகாரிகளுடன் நேரு எம்.எல்.ஏ. ஆய்வு
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளுதல் சம்பந்தமாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதிய பஸ் நிலையத்தை நேரு எம்.எல்.ஏ ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகளுடன்  ஆய்வு செய்தார்.

    புதிய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை, பயணிகள் தங்க ஓய்வறைகள் அமைத்தல், பஸ் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளுதல் சம்பந்தமாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

     ஆய்வின் போது புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரியான ரவிச்சந்திரன், திருஞானம் நகராட்சி செயற்பொறி யாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் குப்புசாமி மற்றும் உருளையன்பேட்டை தொகுதி மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இப்பணியை நேரு எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
    • அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களும் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை புதுப்பாளையம் வார்டு கண்ணன் நகர் பகுதியில் பொதுப்பணித் துறை நீர்பாசன கோட்ட பிரிவின் மூலம் பழைய வாய்க்காலை மாற்றி புதிய கான்கிரீட் வாய்க்காலாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணியை நேரு எம்.எல்.ஏ பார்வையிட்டார்.

     அப்போது பள்ளிக்கூட பகுதி என்பதால் பணிகளை விரைவாக முடிக்கும்படி அதிகாரி களை கேட்டுக் கொண்டார்.

    ஆய்வின்போது பொதுப்பணித் துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களும் உடன் இருந்தனர். 

    • புதுவையில் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
    • பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிப்பக்குள்ளாகி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை உருளை யன்பேட்டை சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்க ளுக்கு பொதுத்தேர்வு தேதி இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கிறது. தற்போது கோடை காலம் தொடங்கி வெப்பம் அதிகளவில் பொது மக்களை வாட்டி வருகிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிப்பக்குள்ளாகி வருகிறார்கள்.

    கொரோனா நோய் தாக்கம் அதிகம் பரவி வருகிறது. பெற்றோர் மற்றும் மாணவர் நலனில் அக்கறை கொண்டு 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் 15-ந் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

    இதுகுறித்து முதல்- அமைச்சர், கல்வி அமைச்சர், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதிய தண்ணீர் குழாய்கள் அமைக்கும் பணி, புதிய கழிவுநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இதையடுத்து தொகுதி எம்எல்ஏ நேரு அப்பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை உருளை யன்பேட்டை தொகு திக்குட்பட்ட சின்ன வாய்க்கால் வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வாய்க்கால் மேம்படுத்தும் பணி, புதிய மின் கேபிள்கள், புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி, புதிய தண்ணீர் குழாய்கள் அமைக்கும் பணி, புதிய கழிவுநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மிக மெதுவாக பணிகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். இதையடுத்து தொகுதி எம்எல்ஏ நேரு இன்று அப்பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பணிகள் ஏன் மிகவும் காலதாமதமாக நடக்கிறது என அதிகாரிகளிடம் எம்எல்ஏ கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது பொதுப்ப ணித்துறை நீர்ப்பாசன பிரிவு உதவி பொறியாளர் சம்மந்தம், பொது சுகாதார குடிநீர் பிரிவு உதவி பொறியாளர் வாசு, கழிவுநீர் உட்பட்ட பிரிவு உதவி பொறியாளர் வைத்தியநாதன், மின்துறை உதவி பொறியாளர் கண்ணன், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தினர் உடனிருந்தனர்.

    தொகுதியில் பணிகள் நடைபெறவில்லை என்று பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நேரு எம்.எல்.ஏ. போராட்டம்
    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதியில் வாய்க்கால்களை துர்வாருதல், புதிதாக சாலைகள் அமைத்தல் போன்ற அடிப்படை பணிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் பணிகள் மேற் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இதை கண்டித்து உருளையன் பேட்டை  தொகுதி எம்.எல்.ஏ. நேரு, தொகுதி மக்களுடன் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டார். 

     அமைச்சர்கள் தொகுதியில் மட்டும் பணிகள் நடக்கிறது. எனது தொகுதியில் வேலை எதுவும் நடைபெறவில்லை  எனக்கூறி அதிகாரிகளிடம் நேரு எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறி யாளர் ஏழுமலை மற்றும் அதிகாரிகள், அங்கு வந்து எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுப்பணித்துறை மூலம்  உருளையன்பேட்டை தொகுதியில்  நடைபெற வேண்டிய பணிகள் அனைத்தையும் விரைவாக முடித்து தருவதாக  உறுதிய ளித்தனர். 

    இதையடுத்து நேரு எம்.எல்.ஏ. முற்றுகையை கைவிட்டு பொதுமக்களோடு கலைந்து சென்றார்.
    நிலஅளவை துறை இயக்குனருடன் நேரு எம்.எல்.ஏ ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை  தொகுதி எம்.எல்.ஏ. நேரு   நில அளவை பதிவேடுகள் துறை அலுவலகத்தில் இயக்குனர்  ரமேஷ் மற்றும் தாசில்தார், நில ஆய்வாளருடன் ஆலோசனை நடத்தினர்.

    உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட அரசு மனை பட்டாவில் பெயர் மாற்றம் செய்தல் வாரிசு பட்டா  பெயர் மாற்றம் செய்தல், யாரும் உரிமை கோராத இடத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு மனை பட்டா வழங்குதல்  போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    ஆலோசனையின் போது மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் ராமலிங்கம், கலியன், சிவராஜ், குணசேகரன், வேலாயுதம், ஆதி, குப்புசாமி, கோவிந்தராஜ், ரெனோ, சிவராமன், காமராஜ்,  தர்மேஷ்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×