search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மின்துறை அலுவலகம் முற்றுகை-நேரு எம்.எல்.ஏ. அறிவிப்பு
    X

    கோப்பு படம்.

    மின்துறை அலுவலகம் முற்றுகை-நேரு எம்.எல்.ஏ. அறிவிப்பு

    • புதுவை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. சமூக அமை ப்புகளு டன் இணைந்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    • இது புதுவை மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இத்திட்டம் ஏழை, எளிய, நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கக்கூடியதா க உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. சமூக அமை ப்புகளு டன் இணைந்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:-

    மத்திய அரசு அழுத்தம் காரணமாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுவை அரசு ரூ.28 கோடி செலவில் கொண்டு வந்த 33 ஆயிரம் புதிய டிஜிட்டல் ஸ்மார்ட் மீட்டர்களை மாற்றிவிட்டு, மொத்தம் 4.07 லட்சம் மின் இணைப்புகளுக்கும் ரூ.251.10 கோடி மதிப்பில் புதிய பிரீபெய்டு மின்மீட்டர் பொருத்தும் பணி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

    இது புதுவை மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இத்திட்டம் ஏழை, எளிய, நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கக்கூடியதா க உள்ளது.

    இத்திட்டத்தால் ஏற்படும் செலவு பொதுமக்கள் தலையில் சுமத்தப்படும். முன்கூட்டியே பணம் செலுத்தினால் மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்த முடியும் என்ற கட்டாய நிலைக்கு மக்கள் தள்ளப் படுவர். இது முற்றிலும் மக்கள் விரோத திட்டமாகும்.

    விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்தாகும். மின் கட்டணமும் பல மடங்கு உயரும். புதுவை அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மூக நல அமைப்புகளை ஒன்றிணைத்து புதுவை-காரைக்காலில் ஒரே சமயத்தில் மாநிலம் தழுவிய மின்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப் படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×