search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    துப்புரவு பணியாளர்களுக்கு சேலை-சர்க்கரைநேரு எம்.எல்.ஏ. வழங்கினார்
    X

    துப்புரவு பணியாளர்களுக்கு நேரு எம்.எல்.ஏ. மற்றும் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் சேலை மற்றும் சர்க்கரை வழங்கிய காட்சி.

    துப்புரவு பணியாளர்களுக்கு சேலை-சர்க்கரைநேரு எம்.எல்.ஏ. வழங்கினார்

    • கோஜூரியோ கராத்தே சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உருளையன்பேட்டை நகர பகுதியில் புதுவை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 100-க்கு மேற்பட்டவர்களுக்கு புடவை மற்றும் நாட்டு சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் சேவை இயக்கம் இளைஞர்கள் செங்குட்டுவன்,பாக்கியராஜ்,செழியன் ரஞ்சித்,அப்துல், மணி ,ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    கோஜூரியோ கராத்தே சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உருளையன்பேட்டை நகர பகுதியில் புதுவை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 100-க்கு மேற்பட்டவர்களுக்கு புடவை மற்றும் நாட்டு சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக மனித நேய மக்கள் சேவை இயக்க நிறுவனரும், உருளை யன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான நேரு புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து பொன்னாடை போர்த்தி அவர்களுக்கு புடவை மற்றும் நாட்டு சர்க்கரை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் சேவை இயக்கம் இளைஞர்கள் செங்குட்டுவன்,பாக்கியராஜ்,செழியன் ரஞ்சித்,அப்துல், மணி ,ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உருளையன்பேட்டை இளை ஞர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×