search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொதுப்பணித்துறை தலைமை பதவிக்குஉள்ளூர் அதிகாரியை நியமிக்க வேண்டும்-நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    பொதுப்பணித்துறை தலைமை பதவிக்குஉள்ளூர் அதிகாரியை நியமிக்க வேண்டும்-நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    • புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ளார்.
    • வெளியிலிருந்து வரும் பொறியாளருக்கு உள்ளூரில் தேவைகள் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ நேரு பேசியதாவது:-

    புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ளார். இந்த பதவிக்கு வெளியில் இருந்து பொறியாளரை நியமிப்பதற்கான கோப்பு தயார் செய்யப்பட்டு கவர்னர் ஒப்புதல் பெறப்பட்டதாக தெரிய வருகிறது.

    பொதுப்பணி த்துறை யிலேயே பல ஆண்டுகள் பணியாற்றிய தகுதி வாய்ந்த பொறியாளர்கள் இருக்கும் நிலையில் வெளியில் இருந்து எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

    தலைமை பொறியாளர் பதவிக்கு பொதுப்பணி துறையில் உள்ள மூத்த பொறியாளரை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

    வெளியிலிருந்து வரும் பொறியாளருக்கு உள்ளூரில் தேவைகள் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. எம்.எல்.ஏ.க்கள் கூறுவதை புரிந்து செயல்பட மாட்டார்கள்.

    எனவே உள்ளூர் நிலைமையை நன்கு அறிந்த பொதுப்பணித்துறை சார்ந்த மூத்த பொறியாளரையே தலைமை பொறியாளர் பதவிக்கு நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.

    Next Story
    ×