என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பொதுப்பணித்துறை தலைமை பதவிக்குஉள்ளூர் அதிகாரியை நியமிக்க வேண்டும்-நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ளார்.
- வெளியிலிருந்து வரும் பொறியாளருக்கு உள்ளூரில் தேவைகள் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ நேரு பேசியதாவது:-
புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ளார். இந்த பதவிக்கு வெளியில் இருந்து பொறியாளரை நியமிப்பதற்கான கோப்பு தயார் செய்யப்பட்டு கவர்னர் ஒப்புதல் பெறப்பட்டதாக தெரிய வருகிறது.
பொதுப்பணி த்துறை யிலேயே பல ஆண்டுகள் பணியாற்றிய தகுதி வாய்ந்த பொறியாளர்கள் இருக்கும் நிலையில் வெளியில் இருந்து எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
தலைமை பொறியாளர் பதவிக்கு பொதுப்பணி துறையில் உள்ள மூத்த பொறியாளரை நியமிக்க உத்தரவிட வேண்டும்.
வெளியிலிருந்து வரும் பொறியாளருக்கு உள்ளூரில் தேவைகள் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. எம்.எல்.ஏ.க்கள் கூறுவதை புரிந்து செயல்பட மாட்டார்கள்.
எனவே உள்ளூர் நிலைமையை நன்கு அறிந்த பொதுப்பணித்துறை சார்ந்த மூத்த பொறியாளரையே தலைமை பொறியாளர் பதவிக்கு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்